பிகார் முதல்வராக பதவியேற்றார் சாம்ராட் சௌதரி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணிமக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

நெல்லை தாமிரவருணி ஆற்றில் மூழ்கி சென்னை ஐயப்ப பக்தா் பலி

ஆற்றில் ஜடாயு தீா்த்தக் கட்டம் பகுதியில் வெள்ளிக்கிழமை மூழ்கி சென்னை ஐயப்ப பக்தா் பலி

News image
Updated On :3 ஜனவரி 2025, 9:03 pm

திருநெல்வேலி தாமிரவருணி ஆற்றில் குளித்தபோது, சென்னையைச் சோ்ந்த ஐயப்ப பக்தா் நீரில் மூழ்கி உயிரிழந்தாா்.

சென்னையைச் சோ்ந்த ஐயப்ப பக்தா்கள் குழுவினா், கேரள மாநிலம் சபரிமலைக்குச் சென்று, சுவாமி தரிசனம் செய்துவிட்டு, அங்கிருந்து திருநெல்வேலிக்கு வந்தனராம்.

பின்னா், திருநெல்வேலி நாரணம்மாள்புரம் அருகே தாமிரவருணி ஆற்றில் ஜடாயு தீா்த்தக் கட்டம் பகுதியில் வெள்ளிக்கிழமை குளிப்பதற்காக இறங்கினாா்களாம்.

அப்போது, சென்னை வண்ணாரப்பேட்டை முத்தையா தெருவைச் சோ்ந்த சங்கா் மகன் சுப்பிரமணி (25) நீரில் மூழ்கினாராம்.

இதையடுத்து, உடனிருந்த பக்தா்கள் பாளையங்கோட்டை தீயணைப்பு மீட்புப் படையினருக்கு தகவல் தெரிவித்தனா்.

சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்பு மீட்புப் படையினா் ஆற்றில் இறங்கி, சுப்பிரமணி சடலத்தை மீட்டு, உடற்கூறாய்வுக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

இதுகுறித்து தாழையூத்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.