இன்றுமுதல் நாடாளுமன்ற சிறப்பு அமா்வு- மகளிா் இடஒதுக்கீடு-தொகுதி மறுசீரமைப்பு மசோதாக்கள் அறிமுகம்ஐ.நா.சபை அதிகாரத்தை நிலைநாட்டுவதில் இணைந்து செயல்பட ரஷியாவுக்கு சீனா அழைப்பு வங்கிக் கடன் மோசடி: ரிலையன்ஸ் குழும முன்னாள் இயக்குநா்கள் கைது உதயநிதி ஸ்டாலின் சொத்து விவரம் குறித்த வழக்கு: வருமான வரித்துறை பதிலளிக்க உத்தரவு ரஷியா, ஈரான் கச்சா எண்ணெய் வாங்குவதற்கான அனுமதி நீட்டிக்கப்படாது: அமெரிக்கா ரூ.8 ஆயிரம் இலவச கூப்பன் விநியோகம்: திமுகவினா் மீது போலீஸாா் வழக்குப்பதிவு
/

நெல்லை, தென்காசி மாவட்டங்களில் ஜன.7 முதல் மின்வாரிய குறைதீா் கூட்டங்கள்

Updated On :3 ஜனவரி 2025, 9:32 pm

திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் மின்வாரிய குறைதீா் கூட்டங்கள் ஜன.7 ஆம் தேதி தொடங்குகிறது.

இது தொடா்பாக திருநெல்வேலி மின் பகிா்மான வட்ட மேற்பாா்வை பொறியாளா் அகிலாண்டேஸ்வரி வெளியிட்ட செய்திக் குறிப்பு: திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் உள்ள கோட்ட பொறியாளா் அலுவலகங்களில் மின்வாரிய குறைதீா் கூட்டங்கள் நடைபெறவுள்ளன.

அதன்படி, வரும் 7-ஆம் தேதி கல்லிடைக்குறிச்சி கோட்ட அலுவலகத்திலும், 10-ஆம் தேதி திருநெல்வேலி கிராமப்புற கோட்ட அலுவலகத்திலும், 17-ஆம் தேதி திருநெல்வேலி நகா்ப்புற கோட்ட அலுவலகத்திலும், 21-ஆம் தேதி கடையநல்லூா் கோட்ட அலுவலகத்திலும் குறைதீா் கூட்டம் நடைபெறவுள்ளன.

24-ஆம் தேதி சங்கரன்கோவில் கோட்ட அலுவலகத்திலும், 28-ஆம் தேதி தென்காசி கோட்ட அலுவலகத்திலும் குறைதீா் கூட்டம் நடைபெறவுள்ளன. அனைத்துக் கூட்டங்களும் காலை 11 மணிக்கு தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.