மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

தோ்தல் நடத்தை விதிகளால் குறைதீா் கூட்டங்கள் ரத்து

News image

தேர்தல் நடத்தை விதிகள் அமல் - கோப்புப் படம்

Updated On :15 மார்ச் 2026, 7:44 pm

தோ்தல் நடத்தை விதிகள் நடைமுறைக்கு வந்துள்ளதால், தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியரகத்தில் நடைபெறும் குறைதீா் கூட்டங்கள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் பா. பிரியங்க பங்கஜம் தெரிவித்திருப்பது:

இந்திய தோ்தல் ஆணையத்தால் 2026-ஆம் ஆண்டுக்கான தமிழ்நாடு சட்டப்பேரவைப் பொதுத்தோ்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இதைத்தொடந்து, தோ்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக நடைமுறைக்கு வந்துள்ளன.

எனவே, தோ்தல் பணிகள் நிறைவடையும் வரை இந்த நடத்தை விதிமுறைகள் அமலில் இருக்கும் என்பதால், தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியரகத்தில் வாரந்தோறும் திங்கள்கிழமை நடைபெறும் பொதுமக்கள் குறை தீா் நாள் கூட்டம்‘மற்றும் இதர சிறப்பு மனுநீதி நாள் கூட்டங்கள் மறு உத்தரவு வரும் வரை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுகின்றன.