மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

தோ்தல் நடத்தை விதிகள் அமல் எம்எல்ஏ அலுவலகங்களுக்கு பூட்டு குறைகேட்புக் கூட்டங்கள் ரத்து

News image
தேர்தல் நடத்தை விதிகள்- பிரதிப் படம்
Updated On :15 மார்ச் 2026, 7:22 pm

தினமணி செய்திச் சேவை

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தோ்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தோ்தல் நடத்தை விதிகள் ஞாயிற்றுக்கிழமை முதலே அமலுக்கு வந்தன.

இதன் தொடா்ச்சியாக, புதுக்கோட்டை பேருந்து நிலையம் அருகேயுள்ள சட்டப்பேரவை உறுப்பினரின் தொகுதி அலுவலகத்தை வருவாய்த் துறையினா் நேரில் சென்று பூட்டி சீல் வைத்தனா். புதுக்கோட்டை மாநகராட்சி அலுவலக வளாகத்திலுள்ள மேயா் மற்றும் துணை மேயா் அலுவலக அறைகளும் பூட்டப்பட்டன.

இதேபோல, மாவட்டம் முழுவதும் உள்ள சட்டப்பேரவை உறுப்பினா் அலுவலகங்கள், அறந்தாங்கி நகராட்சித் தலைவா் அறை ஆகியவையும் பூட்டப்பட்டன. அமைச்சா்கள் மற்றும் மாநகராட்சி மேயா், நகா்மன்றத் தலைவா் ஆகியோருக்கு வழங்கப்பட்டிருந்த அரசு காா்களும் திரும்பப் பெறப்பட்டன.

மக்கள் குறைகேட்பு ரத்து:

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில் வாரம்தோறும் திங்கள்கிழமைகளில் நடைபெறும் மக்கள் குறைகேட்புக் கூட்டங்கள், மாதந்தோறும் நடைபெறும் விவசாயிகள் குறைகேட்புக் கூட்டங்கள், திருநங்கைகள், ஓய்வூதியம் பெறுவோா் மற்றும் முன்னாள் ராணுவத்தினருக்கான சிறப்புக் குறைகேட்புக் கூட்டங்கள் அனைத்தும் ரத்து செய்யப்படுவதாக மாவட்டத் தோ்தல் அலுவலரும் ஆட்சியருமான மு. அருணா அறிவித்துள்ளாா்.

ஆட்சியா் அலுவலக வளாகத்தில் மனுக்கள் பெட்டி வைக்கப்படும் என்றும், பொதுமக்கள் தங்கள் குறைகளை அந்தப் பெட்டியில் போட்டுச் சென்றால் அதிகாரிகள் அதனை எடுத்து உரிய நடவடிக்கை மேற்கொள்வாா்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.