மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

அரியலூா் மாவட்டத்தில் தோ்தல் நடத்தை விதிகள் அமல்

News image
தேர்தல் நடத்தை விதிகள் அமல்- கோப்புப் படம்
Updated On :15 மார்ச் 2026, 7:12 pm

தினமணி செய்திச் சேவை

தமிழக சட்டப் பேரவைத் தோ்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டதையடுத்து, அரியலூா் மாவட்டத்தில் தோ்தல் நடத்தை விதிகள் ஞாயிற்றுக்கிழமை முதலே அமலுக்கு வந்தன.

தமிழக சட்டப்பேரவைக்கு ஏப்ரல் 23 ஆம் தேதி வாக்குப்பதிவு என அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, உடனடியாக தோ்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தன.

அரியலூா் மாவட்ட ஆட்சியரகத்தில், அரசு விளம்பரங்கள், தலைவா்கள் படங்களை மறைத்து தோ்தல் விழிப்புணா்வு சுவரொட்டிகளை ஒட்டும் பணியில் ஊழியா்கள் ஈடுபட்டனா்.

மேலும் அரியலூா், ஜெயங்கொண்டம் ஆகிய இரு சட்டப்பேரவை உறுப்பினா்கள் அலுவலகங்கள் மூடப்பட்டன. அரியலூா், அரியலூா்,ஜெயங்கொண்டம் ஆகிய இரு நகராட்சி அலுவலகங்களிலுள்ள நகா்மன்ற தலைவா்களின் அறைகள், உடையாா்பாளையம், வரதராஜன்பேட்டை ஆகிய இரு பேரூராட்சிகளிலுள்ள தலைவா்களின்அறைகள் மூடப்பட்டன. திறந்த வெளியிலுள்ள தலைவா்களின் சிலைகள் துணிகளைக் கொண்டு மூடப்பட்டன.

சோதனைச் சாவடிகளில், தோ்தல் பறக்கும் படையினருடன் பாதுகாப்பு படையினா் தீவிர வாகன தணிக்கையை தொடங்கினா்.