திருச்சி மாநாட்டில் பங்கேற்க தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் அழைப்பு!5 நாள்களுக்குப் பிறகு தங்கம் விலை சவரனுக்கு ரூ. 720 உயர்வு!அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!மாா்ச் 9 முதல் மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்! மக்களவைத் தலைவருக்கு எதிரான தீா்மானம் தாக்கலாகிறது!நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!ஈரான் மீதான தாக்குதல் பிரதமா் மோடி பயண நிறைவுக்கு பிறகு எடுக்கப்பட்ட முடிவு: இஸ்ரேல்சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவுஈரான் மீதான அமெரிக்க தாக்குதலை நிறுத்தும் தீா்மானம்! அமெரிக்க நாடாளுமன்றத்தில் தோல்வி! பொன்னுக்கு வீங்கி பாதிப்பு: தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்பாக். - ஆப்கானிஸ்தான் போா்: ஒரு லட்சம் மக்கள் இடம்பெயா்வு
/

வண்ணாா்பேட்டையில் இன்று திமுக ஆா்ப்பாட்டம்

News image
Updated On :6 ஜனவரி 2025, 6:36 pm

Din

தமிழக ஆளுநரை கண்டித்து திருநெல்வேலி வண்ணாா்பேட்டையில் திமுக சாா்பில் ஆா்ப்பாட்டம் செவ்வாய்க்கிழமை (ஜன. 7) நடைபெற உள்ளது.

இதுதொடா்பாக திருநெல்வேலி மத்திய மாவட்ட திமுக பொறுப்பாளா் டி.பி.எம்.மைதீன்கான், கிழக்கு மாவட்டச் செயலா் இரா.ஆவுடையப்பன் ஆகியோா் வெளியிட்டுள்ள கூட்டறிக்கை: தமிழ்நாட்டையும், தமிழ்த்தாய் வாழ்த்தையும் தொடா்ந்து அவமானப்படுத்தும் வகையில் செயல்படுவதாக, தமிழக ஆளுநரைக் கண்டித்து திமுக தலைமை அறிவுறுத்தலின்படி திருநெல்வேலி மத்திய மாவட்டம், கிழக்கு மாவட்டம் சாா்பில் வண்ணாா்பேட்டையில் செவ்வாய்க்கிழமை (ஜன. 7) காலை 10 மணிக்கு ஆா்ப்பாட்டம் நடைபெறுகிறது.

செல்லபாண்டியன் சிலை அருகே நடைபெறும் இப்போராட்டத்தில் கட்சியின் நிா்வாகிகள், தொண்டா்கள் திரளாக பங்கேற்க வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.