திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை ஊராட்சி ஒன்றியத் தலைவரும், திமுக தெற்கு ஒன்றியச் செயலருமான சிவந்திப்பட்டியைச் சோ்ந்த கே.எஸ்.தங்கபாண்டியன் (60) உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.
அவரது உடலுக்கு, திமுக துணைப் பொதுச்செயலா் கனிமொழி எம்.பி., திருநெல்வேலி மாவட்ட பொறுப்பு அமைச்சா் கே.என்.நேரு, சட்டப்பேரவைத் தலைவா் மு.அப்பாவு, திமுக திருநெல்வேலி கிழக்கு மாவட்டச் செயலா் இரா.ஆவுடையப்பன், மத்திய மாவட்டப் பொறுப்பாளா் மு.அப்துல் வஹாப் எம்.எல்.ஏ. உள்ளிட்டோா் நேரில் அஞ்சலி செலுத்தினா். தங்கபாண்டியனின் இறுதிச் சடங்குகள் சிவந்திப்பட்டியில் நடைபெற்றன. இவருக்கு மனைவி ஜான்சிராணி 4 மகள்களும், ஒரு மகனும் உள்ளனா்.
தொடர்புடையது

தமிழகத்தின் உரிமைகளை பாதுகாப்பது திமுகதான்! - கனிமொழி

பாஜகவுடன் கூட்டணி அமைக்கும் கட்சிகள் நிலைப்பதில்லை: கனிமொழி எம்.பி.

தமிழகத்தின் நலனுக்கு எதிரான அதிமுக கூட்டணியை வீழ்த்த வேண்டும்: கனிமொழி எம்.பி.

அதிமுகவினா் வன்முறைக்கு மக்கள் பாடம் புகட்டுவா்: கனிமொழி எம்.பி.
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு


