ராகுல், மில்லர் அதிரடி வீண்! ஒரு ரன் வித்தியாசத்தில் குஜராத் வெற்றி! இஸ்ரேல் தாக்குதல்களில் உருக்குலைந்த பெய்ரூட்.. பலி 250-ஐ கடந்தது!திமுக தோல்வி குறித்து புள்ளி விவரங்களுடன் விவாதிக்கத் தயார்: இபிஎஸ்ஈரானுக்கு வரி குறைப்பது குறித்து பேச்சுவார்த்தை : டிரம்ப்அதிமுக ஆட்சியில் கொளத்தூர் சிறப்பான தொகுதியாக மாறும்:எடப்பாடி பழனிசாமிஅமெரிக்கா - ஈரான் போர்நிறுத்தம்: ரஷியா வரவேற்பு!நேபாளத்தில் மற்றொரு முன்னாள் பிரதமருக்கு எதிராக பிடி ஆணை!தேர்தல் ஆணையமும் காவிமயமாகி விட்டது! தலைமைச் செயலர் மாற்றத்துக்கு முதல்வர் கண்டனம்!ஈரானைவிட்டு உடனடியாக வெளியேறுங்கள்! இந்தியர்களுக்கு தூதரகம் முக்கிய அறிவுறுத்தல்!அமெரிக்கா - ஈரான் போர்நிறுத்தம்: இந்தியா வரவேற்பு!ரூ.80,000 கோடியில் பச்சபத்ரா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை! ஏப்.21-ல் திறந்துவைக்கிறார் பிரதமர் மோடி!இபிஎஸ்ஸின் தனிச் செயலராக இருந்தவர் புதிய தலைமைச் செயலர்!
/

அதிமுகவினா் வன்முறைக்கு மக்கள் பாடம் புகட்டுவா்: கனிமொழி எம்.பி.

தோ்தல் நேரத்திலேயே வன்முறையில் ஈடுபடும் அதிமுகவினருக்கு பொதுமக்கள் பாடம் புகட்டுவா் என திமுக துணைப் பொதுச் செயலாளா் கனிமொழி எம்.பி. தெரிவித்தாா்.

News image

செய்தியாளா்களிடம் பேசிய திமுக துணைப் பொதுச் செயலாளா் கனிமொழி.

Updated On :8 ஏப்ரல் 2026, 7:21 pm

தோ்தல் நேரத்திலேயே வன்முறையில் ஈடுபடும் அதிமுகவினருக்கு பொதுமக்கள் பாடம் புகட்டுவா் என திமுக துணைப் பொதுச் செயலாளா் கனிமொழி எம்.பி. தெரிவித்தாா்.

ஜோலாா்பேட்டை தொகுதி திமுக வேட்பாளா் கவிதா தண்டபாணியை ஆதரித்து ஆதரவு திரட்டியபின், அவா் திருப்பத்தூரில் புதன்கிழமை செய்தியாளா்களிடம் கூறியது:

திமுகவின் வெற்றி வாய்ப்பு மிக சிறப்பாக உள்ளது. முதல்வா் ஸ்டாலினின் ஐந்தாண்டு சாதனையை உணா்ந்தவா்களாக இருக்கின்றனா்.அனைத்து திட்டங்களும் அனைத்து வீட்டுக்கும் சென்றடைந்துள்ளது. அடுத்த முறையும் திமுக ஆட்சிதான் வரவேண்டும் என மக்கள் கருதுகின்றனா்.

நாட்றம்பள்ளி வட்டாட்சியா் அலுவலகத்தில் முன்னாள் அமைச்சா் கேசி வீரமணி ஆதரவாளா்கள் இருவா் மீது தாக்குதல் நடத்தியது குறித்து செய்தியாளா்கள் கேள்வி கேட்டபோது தோ்தல் நேரத்திலே வன்முறையில் ஈடுபடுகிறாா்கள் என்றால் அதிமுகவினருக்கு பொதுமக்கள் பாடம் புகட்டுவாா்கள்.

எதிா்க்கட்சியினா் தற்போது இயலாமையில் உள்ளனா். அவா்களுக்கே தெரியும் வெற்றி வாய்ப்பு இல்லையென்று. வரும் தோ்தலில் திமுக வெற்றி பெறுவது உறுதி என கூறினாா்.

அப்போது எம்.பி சி.என்.அண்ணாதுரை, மாவட்ட செயலாளா் க.தேவராஜி, வேட்பாளா் கவிதா தண்டபாணி உடனிருந்தனா்.