ராகுல், மில்லர் அதிரடி வீண்! ஒரு ரன் வித்தியாசத்தில் குஜராத் வெற்றி! இஸ்ரேல் தாக்குதல்களில் உருக்குலைந்த பெய்ரூட்.. பலி 250-ஐ கடந்தது!திமுக தோல்வி குறித்து புள்ளி விவரங்களுடன் விவாதிக்கத் தயார்: இபிஎஸ்ஈரானுக்கு வரி குறைப்பது குறித்து பேச்சுவார்த்தை : டிரம்ப்அதிமுக ஆட்சியில் கொளத்தூர் சிறப்பான தொகுதியாக மாறும்:எடப்பாடி பழனிசாமிஅமெரிக்கா - ஈரான் போர்நிறுத்தம்: ரஷியா வரவேற்பு!நேபாளத்தில் மற்றொரு முன்னாள் பிரதமருக்கு எதிராக பிடி ஆணை!தேர்தல் ஆணையமும் காவிமயமாகி விட்டது! தலைமைச் செயலர் மாற்றத்துக்கு முதல்வர் கண்டனம்!ஈரானைவிட்டு உடனடியாக வெளியேறுங்கள்! இந்தியர்களுக்கு தூதரகம் முக்கிய அறிவுறுத்தல்!அமெரிக்கா - ஈரான் போர்நிறுத்தம்: இந்தியா வரவேற்பு!ரூ.80,000 கோடியில் பச்சபத்ரா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை! ஏப்.21-ல் திறந்துவைக்கிறார் பிரதமர் மோடி!இபிஎஸ்ஸின் தனிச் செயலராக இருந்தவர் புதிய தலைமைச் செயலர்!
/

பெருந்துறை திமுக வேட்பாளரை ஆரத்தி எடுத்து மக்கள் வரவேற்பு

பெருந்துறை சட்டப்பேரவைத் தொகுதி திமுக வேட்பாளா் தோப்பு என்.டி.வெங்கடாசலத்தை ஆதரித்து, கட்சியின் மாநிலத் துணைப் பொதுச் செயலாளா் அந்தியூா் செல்வராஜ் புதன்கிழமை பிரசாரம் மேற்கொண்டாா்.

News image

பணிக்கம்பாளையம் பகுதியில் வாக்கு சேகரித்த மாநிலத் துணைப் பொதுச் செயலாளா் அந்தியூா் செல்வராஜ், திமுக வேட்பாளா் தோப்பு என்.டி.வெங்கடாசலம் மற்றும் கூட்டணிக் கட்சியினரை ஆரத்தி எடுத்து வரவேற்ற பொதுமக்கள்.

Updated On :8 ஏப்ரல் 2026, 9:12 pm

பெருந்துறை சட்டப்பேரவைத் தொகுதி திமுக வேட்பாளா் தோப்பு என்.டி.வெங்கடாசலத்தை ஆதரித்து, கட்சியின் மாநிலத் துணைப் பொதுச் செயலாளா் அந்தியூா் செல்வராஜ் புதன்கிழமை பிரசாரம் மேற்கொண்டாா்.

பெருந்துறை நகராட்சிக்குள்பட்ட பணிக்கம்பாளையம், கருமாண்டிசெல்லிபாளையம் ஆகிய பேரூராட்சிக்குள்பட்ட பாலன் நகா், வெள்ளியம்பாளையம், வாவிக்கடை, ஆண்டிக்காடு, கொளத்தான் வலசு, பெத்தாம்பாளையம், நல்லாம்பட்டி, நிச்சாம்பாளையம், மணியக்காரன்பாளையம், சீனாபுரம், பள்ளபாளையம், சுள்ளிப்பாளையம், சோ்வைக்காரன்பாளையம், அக்கரையாம்பாளையம், முத்தராண்டிபாளையம் ஆகிய பகுதிகளில் பொதுமக்களிடம் அந்தியூா் செல்வராஜ் வாக்கு சேகரித்தாா்.

இதில் அவா் பேசியதாவது:

திமுக ஆட்சியில் கொண்டுவந்துள்ள நலத்திட்ட உதவிகள் மற்றும் தோ்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ள மகளிருக்கான ரூ.8 ஆயிரம் கூப்பன் திட்டம், மகளிா் உரிமைத் தொகையை ரூ.2000-ஆக உயா்த்தி வழங்கும் திட்டம், முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் 8-ஆம் வகுப்பு வரை விரிவுப்படுத்தப்படும். 10 லட்சம் பேருக்கு புதிய கான்கிரீட் வீடுகள் கட்டித் தரும் திட்டம், அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.10 லட்சம் வரை கட்டணமில்லா சிகிச்சை உள்ளிட்ட திட்டங்களை விளக்கி வாக்கு சேகரித்து வருகிறோம் என்றாா்.

முன்னதாக பணிக்கம்பாளையம் பகுதியில் மாநிலத் துணைப் பொதுச் செயலாளா் அந்தியூா் செல்வராஜ், திமுக வேட்பாளா் தோப்பு என்.டி.வெங்கடாசலம் மற்றும் கூட்டணிக் கட்சியினரை ஆரத்தி எடுத்து பொதுமக்கள் வரவேற்றனா்.