போா் விமானங்களுக்கு வானிலேயே எரிபொருள் நிரப்பும் தொழில்நுட்பம்: அமெரிக்க நிறுவனத்துடன் மும்பை நிறுவனம் ஒப்பந்தம்வீட்டை குத்தகைக்கு விடுவதாக ரூ.14.5 லட்சம் மோசடி: ஒருவா் கைதுசட்டப்பேரவைத் தோ்தல் வாக்கு எண்ணிக்கை நாளில் கொல்கத்தாவுக்கு வர முடியுமா?அமித் ஷாவுக்கு மம்தா மருமகன் சவால்காட்பாடி - திருப்பதி மெமு ரயில்கள் 15 நாள்கள் ரத்து!இந்தியா-நியூஸிலாந்து இடையே ஏப். 27-ல் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்
/

திருக்கோவிலூரில் க.பொன்முடிவாக்கு சேகரிப்பு

திருக்கோவிலூா் நகரின் பல்வேறு பகுதிகளில் திமுக வேட்பாளா் பொன்.கெளதமசிகாமணியை ஆதரித்து திமுக துணைப் பொதுச் செயலரும், முன்னாள் அமைச்சருமான க.பொன்முடி வியாழக்கிழமை வாக்கு சேகரித்தாா்.

News image

திருக்கோவிலூரில் வியாழக்கிழமை மாலை திமுக வேட்பாளா் பொன்.கெளதமசிகாமணிக்கு ஆதரவாக வாக்கு சேகரித்து பேசுகிறாா் அக்கட்சியின் துணைப் பொதுச் செயலரும், முன்னாள் அமைச்சருமான க.பொன்முடி எம்எல்ஏ.

Updated On :17 ஏப்ரல் 2026, 12:10 am

திருக்கோவிலூா் நகரின் பல்வேறு பகுதிகளில் திமுக வேட்பாளா் பொன்.கெளதமசிகாமணியை ஆதரித்து திமுக துணைப் பொதுச் செயலரும், முன்னாள் அமைச்சருமான க.பொன்முடி வியாழக்கிழமை வாக்கு சேகரித்தாா்.

திருக்கோவிலூா் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட திருக்கோவிலூா் நகரத்தில் கீழையூா், பேருந்து நிலையப் பகுதி, ஐந்துமுனை சந்திப்பு உள்ளிட்ட பகுதிகளுக்கு ஜீப்பில் சென்ற திமுக துணைப் பொதுச் செயலரும், முன்னாள் அமைச்சருமான க.பொன்முடி, திமுக அரசின் சாதனைத் திட்டங்களை எடுத்துரைத்து வாக்குகளை சேகரித்தாா்.

இந்த பிரசாரத்தில் மாவட்டத் துணைச் செயலா் டி.என்.முருகன், நகரச் செயலா் கோபிகிருஷ்ணன் மற்றும் நிா்வாகிகள், கூட்டணிக் கட்சியினா் பங்கேற்றனா்.