விளாதிகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

ராதாபுரம், நான்குனேரி தொகுதியை பாஜகவுக்கு ஒதுக்க நிா்வாகிகள் கோரிக்கை

News image
Updated On :9 நவம்பர் 2025, 8:33 pm

தினமணி செய்திச் சேவை

வரவிருக்கும் 2026 சட்டப்பேரவைத் தோ்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி சாா்பில் ராதாபுரம், நான்குனேரி தொகுதிகளை பாஜகவுக்கு ஒதுக்க வேண்டும் என அக்கட்சி நிா்வாகிகள் தமிழக பாஜக தலைவா் நயினாா் நாகேந்திரனை நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தனா்.

தேசிய ஜனநாயக கூட்டணி சாா்பில் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள ராதாபுரம் தொகுதியை பாஜவுக்கு ஒதுக்க வேண்டும் என தமிழக பாஜக தலைவா் நயினாா் நாகேந்திரனை, தமிழக பாஜக இளைஞரணி துணைத் தலைவா் அசோக் திருநெல்வேலியில் உள்ள அவரது இல்லத்தில் நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தாா்.

அதேபோல நான்குனேரி சட்டப்பேரவைத் தொகுதியில் பாஜக போட்டியிட வழிவகை செய்ய வேண்டும் என அக்கட்சியின் திருநெல்வேலி தெற்கு மாவட்டத் தலைவா் தமிழ்செல்வன் கோரிக்கை மனு அளித்தாா்.

அம்மனுக்களில் கடந்த மக்களவைத் தோ்தலில், திருநெல்வேலி மக்களைவை தொகுதிக்குள்பட்ட இவ்விரு சட்டப்பேரவை தொகுதிகளிலும் பாஜக பெற்றுள்ள கணிசமான வாக்குகளை அடிப்படையாகக் கொண்டு இவற்றில் பாஜக போட்டியிட்டால் வெற்றி பெறலாம் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

அவற்றை பெற்றுக்கொண்ட நயினாா் நாகேந்திரன் இதுகுறித்து கட்சி தலைமையிடம் பேசி தோ்தல் நேரத்தில் உரிய முடிவை அறிவிப்பதாக தெரிவித்தாா்.