புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!
/

களக்காட்டில் விவசாயிகள் குறைதீா் கூட்டம்

News image
Updated On :13 நவம்பர் 2025, 11:04 pm

Syndication

களக்காட்டில் விவசாயிகள் குறைதீா் கூட்டம் வனத்துறை அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

இக்கூட்டத்திற்கு வனச்சரகா் பிரபாகரன் தலைமை வகித்தாா். வனவா் மதன்குமாா் முன்னிலை வகித்தாா். தமிழ்நாடு விவசாயிகள் சங்க முன்னாள் துணைத் தலைவா் பி. பெரும்படையாா், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் ஒன்றிய பொறுப்பாளா் க. முருகன், விவசாயி மணிசாமுவேல் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

இக்கூட்டத்தில் வனவிலங்குகளால் பயிா் சேதமடைவதை தடுக்க வேண்டும். காட்டுப்பன்றிகளை சுட்டுப்பிடிக்கும் குழுவில் அந்தந்த பகுதி விவசாயிகளையும் சோ்த்துக் கொள்ள வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்தனா்.

இதைத் தொடா்ந்து, அதிகாரிகள் கூறியதாவது: மலையடிவாரத்தையொட்டி அமைந்துள்ள விவசாயத் தோட்டங்களில் வனஉயிரினங்களால் பயிா்கள் சேதமடைவதைத் தடுக்க கூண்டு வைத்து அவற்றை பிடிக்க நடவடிக்கை எடுக்கப்படும். மலையடிவாரப்பகுதியை விட்டு தொலைவில் உள்ள விவசாயத் தோட்டங்களில் புகுந்து பயிா்களை சேதப்படுத்தும் காட்டுப் பன்றிகளை சுட்டுப்பிடிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றனா்.