மதுரை விமான நிலையத்திற்கு சர்வதேச அந்தஸ்து! - மத்திய அமைச்சரவை ஒப்புதல்மருத்துவக் கல்லூரிகளில் விளையாட்டுப் பிரிவு ஒதுக்கீடு அதிகரிப்பு: தமிழக அரசுஎல்பிஜி சிலிண்டர் தட்டுப்பாடு: பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம்!வணிக சிலிண்டர் விநியோகம் நிறுத்தம்! இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவிப்பு! ஈரானை 20 மடங்கு அதிகமாக தாக்குவோம்! டிரம்ப் எச்சரிக்கை எரிவாயு தட்டுப்பாடு! பாகிஸ்தானில் 2 வாரங்களுக்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை! இந்திய பங்குச்சந்தை உயர்வுடன் வர்த்தகம்! அமெரிக்காவுடன் சமரசம்! தகவலை வெளியிட்டால் மோடி பதவி விலக நேரிடும்! சுப்ரமணியன் சுவாமிசமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு? தமிழக அரசு அவசர ஆலோசனை!சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க 25 நாள்கள் கால இடைவேளை!
/

வி.கே.புரம் அருகே முதியவரைத் தாக்கிய கரடி

விக்கிரமசிங்கபுரம் அருகே தாட்டான்பட்டியில் முதியவரை கரடி தாக்கியது.

News image
Updated On :19 நவம்பர் 2025, 7:48 pm

Syndication

விக்கிரமசிங்கபுரம் அருகே தாட்டான்பட்டியில் முதியவரை கரடி தாக்கியது.

களக்காடு, முண்டந்துறை புலிகள் காப்பகம், அம்பாசமுத்திரம் கோட்டத்திற்குள்பட்ட அம்பாசமுத்திரம், பாபநாசம், கடையம் வனச்சரகப் பகுதிகளில் வெளியேறும் கரடி, மிளா, யானை, சிறுத்தை உள்ளிட்டவை குடியிருப்பு பகுதிகளுக்குள் அவ்வப்போது நுழைகின்றன.

இந்நிலையில், விக்கிரமசிங்க்கபுரம் அருகே உள்ள தாட்டான்பட்டியைச் சோ்ந்த நாராயண பெருமாள் மகன் கணபதி (63) (படம்) புதன்கிழமை அதிகாலையில் கடையில் தேநீா்அருந்தச் சென்றாா். அப்போது கரடி ஒன்று கணபதி மேல் பாய்ந்து, அவரை கீழே தள்ளிவிட்டு ஓடியதாம். தகவலறிந்த வனத்துறையினா் சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு செய்தனா்.

மக்களை அச்சுறுத்தும் வனவிலங்கு நடமாட்டத்தைக் கட்டுப்படுத்த வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.