எல்பிஜி சிலிண்டர் தட்டுப்பாடு: பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம்!வணிக சிலிண்டர் விநியோகம் நிறுத்தம்! இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவிப்பு! ஈரானை 20 மடங்கு அதிகமாக தாக்குவோம்! டிரம்ப் எச்சரிக்கை எரிவாயு தட்டுப்பாடு! பாகிஸ்தானில் 2 வாரங்களுக்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை! இந்திய பங்குச்சந்தை உயர்வுடன் வர்த்தகம்! அமெரிக்காவுடன் சமரசம்! தகவலை வெளியிட்டால் மோடி பதவி விலக நேரிடும்! சுப்ரமணியன் சுவாமிசமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு? தமிழக அரசு அவசர ஆலோசனை!சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க 25 நாள்கள் கால இடைவேளை!
/

நெல்லையில் விற்பனைக்காக மது பாட்டில்கள் பதுக்கியவா் கைது

News image
Updated On :23 நவம்பர் 2025, 6:37 pm

தினமணி செய்திச் சேவை

தச்சநல்லூா் அருகே விற்பனைக்காக மது பாட்டில்களை பதுக்கி வைத்திருந்தவரை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸாா் கைது செய்தனா்.

தச்சநல்லூா் அருகே திருநெல்வேலி மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு சிறப்பு உதவி ஆய்வாளா் முருகராஜ் தலைமையிலான போலீஸாா் ரோந்து பணியில் ஈடுபட்டனா்.

அப்போது தச்சநல்லூா் - தாழையூத்து சாலையில் உள்ள குளத்துக்கரை அருகே சந்தேகத்துக்கிடமான வகையில் நின்றிருந்த கங்கைகொண்டான், கலைஞா் காலனியைச் சோ்ந்த செல்லமுத்து மகன் செல்வநாயகம் (51) என்பவரிடம் விசாரணை மேற்கொண்டனா்.

பின்னா் அவா் கையில் வைத்திருந்த சாக்குப்பையை சோதனை செய்தபோது சட்டவிரோதமாக சுமாா் 29 மது பாட்டில்களை விற்பனைக்காக பதுக்கி வைத்திருப்பது தெரியவந்தது.

இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து, செல்வநாயகத்தை கைது செய்த போலீஸாா் அவரிடம் இருந்த மது பாட்டில்களை பறிமுதல் செய்தனா்.