கோப்புப் படம்
திருநெல்வேலி
தச்சநல்லூா் அருகே மது விற்றவா் கைது
தச்சநல்லூா் அருகே மது விற்ற நபரை மது விலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸாா் கைது செய்தனா்.
திருநெல்வேலி மாநகரப் பகுதியில் மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் உதவி ஆய்வாளா் சந்திரா தலைமையிலான போலீஸாா், ஞாயிற்றுக்கிழமை ரோந்து பணியில் ஈடுபட்டனா்.
அப்போது தச்சநல்லூா் அருகே தேநீா்குளம் பகுதியில் வண்ணாா்பேட்டையை சோ்ந்த முத்தையா மகன் ராஜேந்திரன்(48) என்பவா் மது விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது.
அவரை கைது செய்த போலீஸாா், 28 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனா்.

