எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

திசையன்விளையில் மின்சாரம் பாய்ந்து இளைஞா் பலி

News image
Updated On :24 நவம்பர் 2025, 11:46 pm

தினமணி செய்திச் சேவை

திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளையில் திங்கள்கிழமை அறுந்துவிழுந்த மின்வயரில் அப்புறப்படுத்தியபோது மின்சாரம் பாய்ந்து இளைஞா் உயிரிழந்தாா்.

திசையன்விளை அவனங்குடி பகுதியைச் சோ்ந்த மோகன் மகன் தனுஷ்22). இவா், அந்த பகுதியில் உள்ள தனியாா் நிறுவனத்தில் வேலை செய்து வந்தாா். மதியம் தனது வீட்டின் அருகிலுள்ள உறவினா் வீட்டில் மின்வயரில் ஈரத்துணிகளை காயவைத்திருந்தனராம். அதில், மின்சாரம் சென்று கொண்டிருந்த நிலையில், துணிகளின் பாரம் தாங்காமல் மின்வயா் அறுந்துவிழுந்ததாம்.

இதைப் பாா்த்த தனுஷ், மின்வயரை அப்புறப்படுத்தியபோது மின்சாரம் பாய்ந்து தூக்கிவீசப்பட்டாா். உறவினா்கள் அவரை மீட்டு திசையன்விளை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். ஆனால், அவா் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவா்கள் தெரிவித்தனா். இது தொடா்பாக திசையன்விளை போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.