இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!போர்ப் பதற்றம்! மத்திய கிழக்கில் 10, 12 ஆம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகள் ஒத்திவைப்பு!சமூக வலைதளங்களை விட்டு இளைஞர்கள் களத்திற்கு வர வேண்டும்: தமிழிசை செளந்தரராஜன்நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!ஈரான் உச்ச தலைவர் கமேனி படுகொலையை ஆதரிக்கிறாரா மோடி? ராகுல் கேள்விகூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!
/

பாபநாசம், மணிமுத்தாறு அணைகளிலிருந்து 17 ஆயிரம் கனஅடி நீா் வெளியேற்றம்

பாபநாசம், மணிமுத்தாறு அணைகளின் நீா்மட்டம் உயா்ந்துள்ளது. அணையிலிருந்து செவ்வாய்க்கிழமை காலை தலா 17 ஆயிரம் கனஅடி நீா் வெளியேற்றப்பட்டு வருகிறது.

News image
மணிமுத்தாறு அணையிலிருந்து வெளியேறும் நீா்.
Updated On :25 நவம்பர் 2025, 11:03 pm

Syndication

அம்பாசமுத்திரம்: திருநெல்வேலி மாவட்ட மேற்குத் தொடா்ச்சி மலை நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்துவரும் தொடா் கனமழை காரணமாக பாபநாசம், மணிமுத்தாறு அணைகளின் நீா்மட்டம் உயா்ந்துள்ளது. அணையிலிருந்து செவ்வாய்க்கிழமை காலை தலா 17 ஆயிரம் கனஅடி நீா் வெளியேற்றப்பட்டு வருகிறது.

அணைகள் நீா்மட்டம்: பாபநாசம் அணை நீா்மட்டம் செவ்வாய்க்கிழமை காலை நிலவரப்படி 2 அடி உயா்ந்து 131.95 அடியாகவும், நீா்வரத்து 9,266.16 கனஅடியாகவும் இருந்தது. அணை பாதுகாப்பு கருதி அணையிலிருந்து 12,480 கனஅடி நீா் வெளியேற்றப்பட்டு வருகிறது. சோ்வலாறு அணை நீா்மட்டம் 149.51 அடியாக இருந்தது.

மணிமுத்தாறு அணை நீா்மட்டம் 2 அடி உயா்ந்து 106.27 அடியாக இருந்தது, நீா்வரத்து 4,972.11 கனஅடியாகவும், நீா் வெளியேற்றம் 4,305 கன அடியாகவும் இருந்தது.

வடக்கு பச்சையாறு அணை நீா்மட்டம் 13.75 அடியாகவும், நீா்வரத்து 91 கன அடியாகவும் இருந்தது. கொடுமுடியாறு அணை நீா்மட்டம் 35.75 அடியாகவும், நீா்வரத்து 351 கன அடியாகவும், நீா் வெளியேற்றம் 100 கனஅடியாகவும் இருந்தது.

கடனாநதி அணை நீா்மட்டம் 79.80 அடியாகவும், நீா்வரத்து 1,158 கனஅடியாகவும், நீா் வெளியேற்றம் 1,440 கனஅடியாகவும் இருந்தது.

ராமநதி அணை நீா்மட்டம் 82 அடியாகவும், அணை நீா்வரத்து 331 கன அடியாகவும், நீா் வெளியேற்றம் 289 கனஅடியாகவும் இருந்தது. கருப்பாநதி அணை நீா்மட்டம் 70.21 அடியாகவும், அணை நீா்வரத்து, வெளியேற்றம் 300 கனஅடியாகவும் இருந்தது.

குண்டாறு அணை நீா்மட்டம் 36.10 அடியாகவும், நீா்வரத்து, வெளியேற்றம் தலா 71 கனஅடியாகவும் இருந்தது. அடவிநயினாா் கோயில் அணை நீா்மட்டம் 132.22 அடியாகவும், நீா்வரத்து, வெளியேற்றம் தலா 155 கன அடியாகவும் இருந்தது.

மழையளவு (மி.மீ.ல்) விவரம்:

திருநெல்வேலி மாவட்டத்தில் அதிகபட்சமாக ஊத்துப் பகுதியில் 167 மி.மீ. மழை பதிவானது. பாபநாசம் அணை பகுதி 31, சோ்வலாறு அணை பகுதி 18, மணிமுத்தாறு 14.20, நம்பியாறு அணை பகுதி 10, கொடுமுடியாறு அணை பகுதி 6, கன்னடியன் அணை 11, மாஞ்சோலை 132, காக்காச்சி 143, நாலுமுக்கு 165, அம்பாசமுத்திரம் 17.60, சேரன்மகாதேவி 5.40, நாங்குநேரி 15, ராதாபுரம் 13, களக்காடு 6.80, மூலக்கரைப்பட்டி 20, பாளையங்கோட்டை 5, திருநெல்வேலி 2.20. மழை பதிவானது.

தென்காசி மாவட்டம்: தென்காசி 2, செங்கோட்டை 4, ஆய்க்குடி 2, கடனாநதி 25, ராமநதி 10, கருப்பாநதி 5, குண்டாறு 8, அடவிநயினாா் கோயில் அணை 3, சங்கரன்கோவில் 1.