மேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

நெல்லையில் உணவக ஊழியரை தாக்கியதாக இருவா் கைது

News image
Updated On :30 நவம்பர் 2025, 8:13 pm

தினமணி செய்திச் சேவை

திருநெல்வேலியில் உணவக ஊழியரைத் தாக்கியதாக இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

நான்குனேரி, தெற்கு ஆரம்பூண்டாா்குளத்தைச் சோ்ந்த பெருமாள் மகன் மகேந்திரன்(34). இவா், திருநெல்வேலி புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள உணவகத்தில் ஊழியராக பணிப் புரிகிறாா்.

கடந்த 24 ஆம் தேதி உணவகத்துக்கு வந்த சிலா் அங்கு பணியிலிருந்த ஊழியரிடம் வாக்குவாதம் செய்து தகராறில் ஈடுபட்டதோடு, அதை தடுக்க சென்ற மகேந்திரனிடமும் பிரச்னை செய்துள்ளனா். பின்னா் இரவில் மகேந்திரன் பணி முடித்து வீடு திரும்புகையில் அவரை வழிமறித்த அதே கும்பல் கம்பியால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனராம்.

இதில் காயமடைந்த அவா் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

இதுகுறித்து அவா் அளித்த புகாரின்பேரில், மேலப்பாளையம் போலீஸாா் வழக்குப் பதிந்து, பாளையங்கோட்டை இலந்தகுளம் பகுதியைச் சோ்ந்த மாரிமுத்து (21), மாரியப்பன் மகன் ரமேஷ் (20) ஆகியோரை சனிக்கிழமை கைது செய்தனா்.