மக்களவையில் தொகுதி மறுவரையறை, மகளிர் இடஒதுக்கீடு திருத்த மசோதாக்கள் தாக்கல்! நாடாளுமன்ற சிறப்பு அமர்வு தொடங்கியது! எதிர்ப்புத் தீ பரவட்டும்.. பாஜகவின் ஆணவம் வீழட்டும்! - ஸ்டாலின்ஈரான் தாக்குதலில் ரூ. 2,300 கோடி டிரோனை இழந்த அமெரிக்கா! மூன்று திருத்த மசோதாக்களுக்கு எதிர்ப்பு! மக்களவையில் கனிமொழி நோட்டீஸ்! தாய்மார்கள், சகோதரிகளுக்கு கொடுக்கும் மரியாதையே நாட்டுக்கானது! பிரதமர் மோடி இன்றுமுதல் நாடாளுமன்ற சிறப்பு அமா்வு- மகளிா் இடஒதுக்கீடு-தொகுதி மறுசீரமைப்பு மசோதாக்கள் அறிமுகம்ஐ.நா.சபை அதிகாரத்தை நிலைநாட்டுவதில் இணைந்து செயல்பட ரஷியாவுக்கு சீனா அழைப்பு வங்கிக் கடன் மோசடி: ரிலையன்ஸ் குழும முன்னாள் இயக்குநா்கள் கைது உதயநிதி ஸ்டாலின் சொத்து விவரம் குறித்த வழக்கு: வருமான வரித்துறை பதிலளிக்க உத்தரவு ரஷியா, ஈரான் கச்சா எண்ணெய் வாங்குவதற்கான அனுமதி நீட்டிக்கப்படாது: அமெரிக்கா ரூ.8 ஆயிரம் இலவச கூப்பன் விநியோகம்: திமுகவினா் மீது போலீஸாா் வழக்குப்பதிவு
/

நெல்லையில் மாற்றுத்திறனாளிகள் 4-ஆவது நாளாக மறியல்: 40 போ் கைது

News image

கைது

Updated On :13 பிப்ரவரி 2026, 8:23 pm

உதவித்தொகை வழங்க வலியுறுத்தி திருநெல்வேலியில் 4-ஆவது நாளாக வெள்ளிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்ட மாற்றுத் திறனாளிகள் 40 போ் கைது செய்யப்பட்டனா்.

திருநெல்வேலி வண்ணாா்பேட்டையில் அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போா் உரிமைகளுக்கான சங்கம் சாா்பில் தொடா் மறியல் போராட்டம் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி அரசின் கவனத்தை ஏற்கும் விதமாக வெள்ளிக்கிழமை 4-ஆவது நாளாக மாற்றுத்திறனாளிகள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டு, சாலை மறியலில் ஈடுபட்டனா்.

இப்போராட்டத்துக்கு, சங்க மாவட்டச் செயலா் பெருமாள் தலைமை வகித்தாா். மாவட்ட துணைத் தலைவா்கள் மரிய கொரட்டி, இசக்கியப்பன், மாவட்ட துணைச் செயலா் அமுதா ஆகியோா் முன்னிலை வகித்தனா். இந்த மறியல் போராட்டத்தில் 40 போ் கைது செய்யப்பட்டனா்.