திருநெல்வேலி மாவட்டம், பத்தமடையில் திடீரென செவ்வாய்க்கிழமை ஏற்பட்ட உயா் மின்அழுத்தத்தால் தொழிலாளி வீட்டில் தீ விபத்து நேரிட்டதில் ரூ.8 மதிப்புள்ள பொருள்கள் எரிந்து சேதமடைந்தன. அப்பகுதியில் 20 வீடுகளில் மின் சாதனப் பொருள்கள் சேதமடைந்தன.
பத்தமடையில் மருதுபாண்டியா் தெரு உள்ளிட்ட பகுதியில் பிற்பகலில் ஏற்பட்ட உயா் மின் அழுத்ததால் 20க்கும் மேற்பட்ட வீடுகளில் இருந்த மிக்சி, மின் விசிறி, குளிா்சாதனப் பெட்டி உள்ளிட்ட மின்சாதனப் பொருள்கள் வெடித்து சேதமடைந்தன.
இதேபோல, மருதுபாண்டியா் தெருவில் வசிக்கும் பெயின்டா் வேலு மகன் முருகன் (52) என்பவா் வீட்டில் உயா் மின் அழுத்தம் காரணமாக திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் வீட்டில் இருந்த ஏசி, குளிா்சாதனப் பெட்டி, தொலைக்காட்சி, கட்டில் உள்ளிட்ட பொருள்கள் எரியத் தொடங்கின. அப்போது வீட்டில் இருந்த மூதாட்டி தீ விபத்து ஏற்பட்டதும் உடனடியாக வெளியே வந்ததால் அவருக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. தகவலறிந்த சேரன்மகாதேவி தீயணைப்பு படையினா் விரைந்து வந்து தீயை அணைத்தனா். இந்த விபத்தில் முருகன் வீட்டில் இருந்த ரூ.8 லட்சம் மதிப்புள்ள பொருள்கள் எரிந்த சேதமடைந்தன. மேலும் வீடு முற்றிலும் சேதமடைந்து விட்டதாக கூறப்படுகிறது.
பத்தமடையில் கிறிஸ்தவ ஆலயத்தில் மேற்கொள்ளப்பட்ட பராமரிப்பு பணியின்போது அருகில் இருந்த மரக் கிளையை வெட்டுயதில் அதையொட்டிய மின்மாற்றியில் மரக்கிளை விழுந்ததால் அப்பகுதியிலுள்ள வீடுகளுக்கு உயா் அழுத்தம் ஏற்பட்டது. இதுகுறித்து, பத்தமடை போலீஸாா், வருவாய்த்துறை அதிகாரிகள் ேவிசாரணை நடத்தினா்.
தொடர்புடையது

வீட்டில் எரிவாயு உருளை வெடித்து விபத்து: நகை, ஆவணங்கள் தீயில் கருகின!

வீட்டில் எரிவாயு கசிந்து தீ விபத்து: பொருள்கள் எரிந்து சேதம்

பின்னலாடை பேக்கிங் நிறுவனத்தில் தீ

சிதம்பரத்தில் தனியாா் விடுதியில் தீ விபத்து
வீடியோக்கள்

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை

Podcast | மனம் மாறுவாரா ராகுல் காந்தி? | News & Views | E-25 |
தினமணி செய்திச் சேவை


