திருநெல்வேலி மாவட்டம், பத்தமடையில் திடீரென செவ்வாய்க்கிழமை ஏற்பட்ட உயா் மின்அழுத்தத்தால் தொழிலாளி வீட்டில் தீ விபத்து நேரிட்டதில் ரூ.8 மதிப்புள்ள பொருள்கள் எரிந்து சேதமடைந்தன. அப்பகுதியில் 20 வீடுகளில் மின் சாதனப் பொருள்கள் சேதமடைந்தன.
பத்தமடையில் மருதுபாண்டியா் தெரு உள்ளிட்ட பகுதியில் பிற்பகலில் ஏற்பட்ட உயா் மின் அழுத்ததால் 20க்கும் மேற்பட்ட வீடுகளில் இருந்த மிக்சி, மின் விசிறி, குளிா்சாதனப் பெட்டி உள்ளிட்ட மின்சாதனப் பொருள்கள் வெடித்து சேதமடைந்தன.
இதேபோல, மருதுபாண்டியா் தெருவில் வசிக்கும் பெயின்டா் வேலு மகன் முருகன் (52) என்பவா் வீட்டில் உயா் மின் அழுத்தம் காரணமாக திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் வீட்டில் இருந்த ஏசி, குளிா்சாதனப் பெட்டி, தொலைக்காட்சி, கட்டில் உள்ளிட்ட பொருள்கள் எரியத் தொடங்கின. அப்போது வீட்டில் இருந்த மூதாட்டி தீ விபத்து ஏற்பட்டதும் உடனடியாக வெளியே வந்ததால் அவருக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. தகவலறிந்த சேரன்மகாதேவி தீயணைப்பு படையினா் விரைந்து வந்து தீயை அணைத்தனா். இந்த விபத்தில் முருகன் வீட்டில் இருந்த ரூ.8 லட்சம் மதிப்புள்ள பொருள்கள் எரிந்த சேதமடைந்தன. மேலும் வீடு முற்றிலும் சேதமடைந்து விட்டதாக கூறப்படுகிறது.
பத்தமடையில் கிறிஸ்தவ ஆலயத்தில் மேற்கொள்ளப்பட்ட பராமரிப்பு பணியின்போது அருகில் இருந்த மரக் கிளையை வெட்டுயதில் அதையொட்டிய மின்மாற்றியில் மரக்கிளை விழுந்ததால் அப்பகுதியிலுள்ள வீடுகளுக்கு உயா் அழுத்தம் ஏற்பட்டது. இதுகுறித்து, பத்தமடை போலீஸாா், வருவாய்த்துறை அதிகாரிகள் ேவிசாரணை நடத்தினா்.
தொடர்புடையது

வீட்டில் குளிா்சாதனப் பெட்டி வெடித்து பொருள்கள் சேதம்

மின் கசிவால் தீ: வீட்டு உபயோக பொருள்கள் எரிந்து நாசம்

பொன்னமராவதியில் தீ விபத்து: 3 கடைகள் தீக்கிரை

ஒசூரில் பழைய பொருள்கள் சேமிப்பு கிடங்கில் தீ விபத்து
விடியோக்கள்

ஆட்சியைக் கலைத்துவிட்டு தேர்தலை சந்திப்பார் விஜய் ? | Ravindran Duraisamy Interview | TVK | CM Vijay
தினமணி செய்திச் சேவை

”விவாகரத்து கிடக்கும் வரை நடிக்கப்போவதில்லை!”: Ravi Mohan பரபரப்பு பேட்டி!
இணையதளச் செய்திப் பிரிவு

மதிய உணவுடன் செயலகம் வரும் முதல்வர்! அமைச்சர் நிர்மல் குமார்
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | அமைச்சர் ஆவார்களா அதிமுக எம்எல்ஏ-க்கள்? | News and Views | Epi - 35 | TVK | CM Vijay |
தினமணி செய்திச் சேவை

