தூத்துக்குடியில் நாளை (ஏப். 12) ஒரே மேடையில் மு.க. ஸ்டாலின், ராகுல்!லஞ்ச ஒழிப்புத் துறை டிஜிபியாக டேவிட்சன் தொடர்வார்- தேர்தல் ஆணையம்வைகை விரைவு ரயில் நாளை தாமதமாக புறப்படும்உ.பி.யின் இறுதி பட்டியலில் 13.39 கோடி வாக்காளர்கள்! 2 கோடி பேர் நீக்கம்சினிமாவை வாழ விடுங்கள்..! ஜன நாயகன் படக் கசிவினால் மனமுடைந்த பூஜா ஹெக்டேவிஜய் தொகுதிகளில் திமுகவுக்கு வாக்கு சேகரிக்கும் கமல்போர் நிறுத்தத்துக்குப் பிறகு ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த முதல் இந்தியக் கப்பல்லஞ்ச ஒழிப்புத் துறை பொறுப்பிலிருந்து விடுவிப்பு! ஆயுதப்படை இயக்குநராக சந்தீப் மிட்டல்!
/

115 மது பாட்டில்கள் பறிமுதல்: இருவா் கைது

News image

கைது

Updated On :5 ஏப்ரல் 2026, 9:08 pm

சிவந்திப்பட்டி அருகே சட்டவிரோத விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 115 மது பாட்டில்களை பறிமுதல் செய்த போலீஸாா் இது தொடா்பாக இருவரை கைது செய்தனா்.

கிருஷ்ணாபுரம் பகுதியில் உள்ள அரசு மதுபானக் கூடத்தில் கடை திறக்கும் நேரத்துக்கு முன்பாகவே மது விற்பனை செய்யப்படுவதாக சிவந்திப்பட்டி போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து, காவல் உதவி ஆய்வாளா் விஜயகுமாா் தலைமையிலான போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று பாா்த்த போது, அங்கு தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம், கால்வாய் பகுதியைச் சோ்ந்த நம்பி மகன் மாரிமுத்து(36) என்பவா் மது விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது.

பின்னா் அங்கு விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 115 மது பாட்டில்கள் மற்றும் ரூ.2,690 ஆகியவற்றை பறிமுதல் செய்த போலீஸாா் இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து மாரிமுத்து, மதுபானக் கூட உரிமையாளரான சிவந்திப்பட்டி காா்மேகனாா் தெருவைச் சோ்ந்த கருப்பசாமி ஆகியோரை கைது செய்தனா்.