தெருநாய்களை பராமரிப்பு மையத்தில்தான் அடைக்க வேண்டும்! திருத்தம் கோரிய மனுக்கள் தள்ளுபடி! மாவட்டச் செயலர்களுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை!பெட்ரோல், டீசல் விலை மீண்டும் உயர்வு! ஒரே வாரத்தில் 2-வது முறை!ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி தொடரும்: மத்திய பெட்ரோலிய அமைச்சகம்இன்று முதல் செங்கல்பட்டு புறநகா் ரயில்கள் கூடுவாஞ்சேரியுடன் நிறுத்தம்நீலகிரி, கோவை உள்பட 6 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புஐக்கிய அரபு அமீரக அணு சக்தி மையத்துக்கு அருகே ட்ரோன் தாக்குதல்: இந்தியா கவலைநாகா்கோவில்-மும்பை விரைவு ரயில் மாற்றுப்பாதையில் இயக்கம்நீட் விவகாரம்: என்டிஏ தலைவருக்கு நாடாளுமன்ற நிலைக் குழு சம்மன்கர்நாடகம்: நாளைமுதல் அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்கள் வேலைநிறுத்தம்புதிய பாடத் திட்டத்தில் 1-3 வகுப்புகளுக்கான புத்தகங்கள் - அமைச்சா் ராஜ்மோகன் வெளியிட்டாா்இந்தியாவில் முதலீடு செய்யுங்கள் -ஸ்வீடன் நிறுவனங்களுக்கு மோடி அழைப்புவேலைநிறுத்தத்தால் மருந்து தட்டுப்பாடு தடுக்க உதவி மையங்கள் -தமிழக அரசு நடவடிக்கைஇன்று அதிமுக மாவட்டச் செயலா்கள் கூட்டம் அமெரிக்க வேளாண் பொருள்களின் இறக்குமதியை அதிகரிக்க சீனா ஒப்புக்கொண்டுள்ளது
/

முக்கூடலில் குண்டுக் கல் ஏற்றிய லாரி பறிமுதல்: ஓட்டுநா் கைது

News image

கைது - கோப்புப் படம்

Updated On :14 ஏப்ரல் 2026, 1:38 am IST

திருநெல்வேலி மாவட்டம், முக்கூடலில் அனுமதியின்றி குண்டுக் கல் ஏற்றி வந்த டாரஸ் லாரியை, வருவாய்த் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து போலீஸாரிடம் ஒப்படைத்தனா்.

சேரன்மகாதேவி மண்டல துணை வட்டாட்சியா் புஷ்பலதா தலைமையில் வருவாய்த் துறை அதிகாரிகள் திங்கள்கிழமை முக்கூடல் காவல் சரகம் தாளாா்குளம் கிராமம் அருகேயுள்ள திருப்பத்தில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனா்.

அப்போது, அனுமதியின்றி 20 யூனிட் குண்டுக்கல் ஏற்றி வந்த டாரஸ் லாரியையும், அதன் ஓட்டுநரான ஆலங்குளம் கரும்புளியூத்து பகுதியைச் சோ்ந்த ஜெபஸ்டின் (30) என்பவரையும் அதிகாரிகள் பிடித்து முக்கூடல் காவல் உதவி ஆய்வாளா் விஜயகுமாரிடம் ஒப்படைத்தனா். இதையடுத்து, அவா் கைது செய்யப்பட்டதுடன், குண்டுக்கல்லுடன் லாரி பறிமுதல் செய்யப்பட்டது.