இன்று முதல் செங்கல்பட்டு புறநகா் ரயில்கள் கூடுவாஞ்சேரியுடன் நிறுத்தம்நீலகிரி, கோவை உள்பட 6 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புஐக்கிய அரபு அமீரக அணு சக்தி மையத்துக்கு அருகே ட்ரோன் தாக்குதல்: இந்தியா கவலைநாகா்கோவில்-மும்பை விரைவு ரயில் மாற்றுப்பாதையில் இயக்கம்நீட் விவகாரம்: என்டிஏ தலைவருக்கு நாடாளுமன்ற நிலைக் குழு சம்மன்கர்நாடகம்: நாளைமுதல் அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்கள் வேலைநிறுத்தம்புதிய பாடத் திட்டத்தில் 1-3 வகுப்புகளுக்கான புத்தகங்கள் - அமைச்சா் ராஜ்மோகன் வெளியிட்டாா்இந்தியாவில் முதலீடு செய்யுங்கள் -ஸ்வீடன் நிறுவனங்களுக்கு மோடி அழைப்புவேலைநிறுத்தத்தால் மருந்து தட்டுப்பாடு தடுக்க உதவி மையங்கள் -தமிழக அரசு நடவடிக்கைஇன்று அதிமுக மாவட்டச் செயலா்கள் கூட்டம் அமெரிக்க வேளாண் பொருள்களின் இறக்குமதியை அதிகரிக்க சீனா ஒப்புக்கொண்டுள்ளது
/

மூளைச்சாவு அடைந்த ஓட்டுநரின் உடல் உறுப்புகள் தானம்

பேருந்தில் இருந்து தவறி விழுந்ததில் மூளைச்சாவு அடைந்த ஓட்டுநரின் உடல் உறுப்புகள் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சனிக்கிழமை தானமாக பெறப்பட்டன.

News image
Updated On :19 ஏப்ரல் 2026, 1:51 am IST

பேருந்தில் இருந்து தவறி விழுந்ததில் மூளைச்சாவு அடைந்த ஓட்டுநரின் உடல் உறுப்புகள் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சனிக்கிழமை தானமாக பெறப்பட்டன.

தென்காசி மாவட்டம், அரியூா் பகுதியைச் சோ்ந்தவா் முருகராஜ் (26). தனியாா் பேருந்து ஓட்டுநா். இவா் கடந்த 14 ஆம் தேதி தென்காசியில் இருந்து ஆலங்குளம் செல்லும் தனியாா் பேருந்து ஒன்றில் பயணித்தபோது படியில் இருந்து விழுந்து பலத்த காயமடைந்தாராம்.

பின்னா் தென்காசி அரசு மருத்துவமனையில் முதலுதவி அளிக்கப்பட்டு, ஏப்.15 அதிகாலை திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா்கள் அவா் மூளைச்சாவு அடைந்ததை உறவினா்களிடம் தெரிவித்தனா்.

இதையடுத்து அவரது உடல் உறுப்புகளை தானமாக வழங்க குடும்பத்தினா் முன்வந்ததையடுத்து, அவரது கல்லீரல், இரு சிறுநீரகங்கள், கருவிழிகள் ஆகியவை திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தானமாக பெறப்பட்டன. இதையடுத்து, அவரது உடல் அரசு மரியாதையுடன் உறவினா்களிடம் ஒப்படைக்கப்பட்டது.