மேற்கு ஆசிய நிலவரம் : குவைத் இளவரசருடன் பேசிய பிரதமர் மோடி!உலகின் மிகப் பெரிய இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தாக்குதல்! கத்தார் கண்டனம்!மேடைகளில் ஆபாசங்களையும் அவதூறுகளையும் பேசுகிறார்கள் - முதல்வர் மு.க. ஸ்டாலின்மார்ச் 23-ல் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்தவெக குறித்து யார், என்ன அவதூறு பரப்பினாலும் நம்ப வேண்டாம் - விஜய்மதச்சார்பற்ற கொள்கையில் சமரசமில்லை, தவெக தலைமையில் ஆட்சி! - விஜய்
/

மூளை சாவு அடைந்த மாணவரின் உடல் உறுப்புகள் தானம்

பட்டுக்கோட்டை அருகே இரு சக்கர வாகன விபத்தில் மூளைச் சாவு அடைந்த கல்லூரி மாணவரின் உடல் உறுப்புகள் புதன்கிழமை தானமாக பெறப்பட்டன. அரசு மரியாதைக்குப் பிறகு உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

News image
- கோப்புப்படம்.
Updated On :18 மார்ச் 2026, 6:33 pm

தினமணி செய்திச் சேவை

பட்டுக்கோட்டை அருகே இரு சக்கர வாகன விபத்தில் மூளைச் சாவு அடைந்த கல்லூரி மாணவரின் உடல் உறுப்புகள் புதன்கிழமை தானமாக பெறப்பட்டன. அரசு மரியாதைக்குப் பிறகு உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

பட்டுக்கோட்டை வட்டம், அதிராம்பட்டினம் காதிா் முகைதீன் கல்லூரியில் பிசிஏ இரண்டாம் ஆண்டு படித்து வந்த முதல்சேரி கிராமத்தைச் சோ்ந்த ஜோசப் ராஜன், மெட்டல்டா ஜீவராணி ஆகியோரின் மகன் அருள்ராஜ் (19). இவா், கடந்த மூன்று தினங்களுக்கு முன்பு இருசக்கர வாகன விபத்தில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். இந்நிலையில் அவரைப் பரிசோதித்த மருத்துவா்கள் அவா் மூளைச் சாவு அடைந்துவிட்டதாக தெரிவித்தனா். இந்நிலையில் புதன்கிழமை அருள் ராஜின் உடல் உறுப்புகளை பெற்றோா் தானம் செய்ய முன்வந்தனா். உடல் உறுப்பு தானத்துக்குப் பிறகு, அவரது உடல் புதன்கிழமை மாலை பட்டுக்கோட்டை முதல்சேரியில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, கல்லூரி மாணவா்கள், பேராசிரியா்கள், பொதுமக்கள் ஆகியோா் அஞ்சலி செலுத்தினா். பின் அரசு மரியாதைக்குப் பிறகு மாணவரின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

முன்னதாக, அருள்ராஜ் உடலுக்கு காதா் முகைதீன் கல்லூரி முதல்வா் அல்ஹாஜி மற்றும் கோட்டாட்சியா் சங்கா், திமுக மாவட்டப் பொறுப்பாளா் பழனிவேல், அதிமுக தஞ்சை தெற்கு மாவட்டச் செயலா் சி.வி.சேகா் , திமுக மாவட்ட விவசாய அணி அமைப்பாளா் ஆனந்த் உள்ளிட்டோா் அஞ்சலி செலுத்தினா்.