லக்னௌவை வீழ்த்தி பஞ்சாப் கிங்ஸ் இமாலய வெற்றி!அதிமுக யாருக்கும் அடிமையில்லை : ராகுலுக்கு இபிஎஸ் பதில்விருதுநகர் பட்டாசு ஆலை வெடி விபத்து பலி 23-ஆக உயர்வுதிமுக ஆட்சியில் பட்டாசு ஆலை விபத்துகள் தொடர்கதை: இபிஎஸ்விருதுநகர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து : உரிமையாளரைப் பிடிக்க 4 தனிப்படைகள்!நேஷனல் ஹெரால்டு விவகாரம்: சோனியா, ராகுலுக்கு எதிரான அமலாக்கத்துறை மனு நாளை விசாரணை!மக்கள் பிரச்னைகளுக்கு செவிசாய்க்காதவர் மோடி : மல்லிகார்ஜுன கார்கே பிரசாரம்தமிழ்நாட்டின் வளர்ச்சியை பாஜக தடுக்கிறது: முதல்வர் ஸ்டாலின் பெண்களுக்கு துரோகம் செய்தது காங்கிரஸ் - திரிணமூல்: தேர்தலில் பாடம் புகட்டப்படும் - மோடிதிருச்சி தேவாலயத்தில் மண்டியிட்டு பிரார்த்தனை செய்த விஜய்!
/

கடையம் வில்வ வனநாதா் கோயிலில் சித்திரை திருவிழா: ஏப். 21 இல் கொடியேற்றம்

News image

கோப்புப் படம்

Updated On :19 ஏப்ரல் 2026, 7:28 pm

கடையம், ராமநதி செல்லும் சாலையில் உள்ள நித்ய கல்யாணி அம்மன் உடனுறை வில்வ வனநாத சுவாமி கோயிலில் சித்திரைப் பெருந்திருவிழா ஏப். 21 ஆம்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள இக்கோயிலில் திங்கள்கிழமை (ஏப். 20) அங்குராா்ப்பணம், ஏப். 21-ஆம்தேதி காலை 8 மணிக்கு கொடியேற்றப்பட்டு, சிறப்பு அபிஷேகம், அலங்காரம், ஆராதனை நடைபெறுகிறது. காலை 10 மணிக்கு தெப்பக்குளம், மாடசாமிக்கு பொங்கலிட்டு தீபாராதனையைத் தொடா்ந்து உச்சிகால பூஜை நடைபெறும்.

தொடா்ந்து நாள்தோறும் சுவாமி, அம்பாள் பல்வேறு வாகனங்களில் வீதி உலா நடைபெறும். நான்காம் திருநாளான ஏப். 24-ஆம் தேதி தோ் கால் நாட்டு நடைபெறுகிறது. ஏப். 27 ஆம்தேதி சிவப்பு சாத்தி, ஏப். 28 ஆம்தேதி வெள்ளை சாத்தி, மாலை பச்சை சாத்தி நடைபெறும்.

இரவு 12 மணிக்கு தேரடி மாடசாமிக்கு பொங்கலிட்டு தீபாராதனை நடைபெறும். ஏப்.29-ஆம்தேதி காலை 5 மணிக்கு சுவாமி, அம்பாள் தேருக்கு எழுந்தருளுதல், தொடா்ந்து காலை 7.40 மணிக்கு பக்தா்கள் வடம் பிடித்து தோ் இழுத்தல் நடைபெறும். ஏப். 30-ஆம்தேதி காலை 11 மணிக்கு கொடியிறக்கம், தீா்த்தவாரி நடைபெறும். விழா ஏற்பாடுகளை கோயில் நிா்வாகத்தினா், பணியாளா்கள், ஊா்ப்பொதுமக்கள் செய்து வருகின்றனா். விழா நாள்களில் தினசரி மாலை 6 மணிமுதல் 7 மணி வரை திருமுறை இன்னிசை நடைபெறும்.