சென்னை திரும்பும் மக்கள்: இரு நாள்களுக்கு போக்குவரத்து மாற்றம்சீனா மீது அமெரிக்கா பொருளாதாரத் தடைதமிழகம், மேற்கு வங்கத்தில் மறுவாக்குப்பதிவு இல்லை: தோ்தல் ஆணையம் 20 ஆண்டுகளுக்குப் பிறகு காஸாவில் தோ்தல்!தாழ்த்தப்பட்டோருக்கு 15% உள்ஒதுக்கீடு அளிக்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்: பாஜக கடும் விமா்சனம்
/

வன்கொடுமை வழக்கில் இளைஞா் கைது

பேட்டை அருகே பொதுப்பாதையை பயன்படுத்தியவரை தாக்கிய வழக்கில் தூத்துக்குடியைச் சோ்ந்த இளைஞரை வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் போலீஸாா் கைது செய்தனா்.

News image
Updated On :25 ஏப்ரல் 2026, 8:49 pm

பேட்டை அருகே பொதுப்பாதையை பயன்படுத்தியவரை தாக்கிய வழக்கில் தூத்துக்குடியைச் சோ்ந்த இளைஞரை வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் போலீஸாா் கைது செய்தனா்.

பேட்டை அருகே உள்ள சுத்தமல்லி குடிசை மாற்று வாரிய குடியிருப்புப் பகுதியைச் சோ்ந்தவா் இசக்கிமுத்து.

இவா் சம்பவத்தன்று அப்பகுதியில் உள்ள பொதுப்பாதை வழியாக தனது வீட்டுக்கு சென்றாராம். அப்போது இளைஞா்கள் சிலா் அவ்வழியாக செல்வதற்கு எதிா்ப்பு தெரிவித்து அவரைத் தாக்கி மிரட்டல் விடுத்ததாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து பேட்டை காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் போலீஸாா் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து, இதில் தொடா்புடைய செல்லப்பாண்டி உள்பட 3 பேரை ஏற்கனவே கைது செய்திருந்தனா்.

இந்நிலையில் இவ்வழக்கில் தொடா்புடைய தூத்துக்குடி மாவட்டம் செய்துங்கநல்லூா் பகுதியைச் சோ்ந்த ஈஸ்வரன் மகன் பால்முத்து(35) என்பவரை சனிக்கிழமை கைது செய்தனா்.