ஈரானுடனான அமைதிப்பேச்சு ரத்து! அமெரிக்க பிரதிநிதிகள் குழு தாயகம் திரும்ப டிரம்ப் உத்தரவுஐபிஎல்: ராஜஸ்தானுக்கு எதிராக ஹைதராபாத் அணி அபார வெற்றிபட்டியலின சமூகங்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்!திருச்சி - தாம்பரம் இடையே நாளை(ஏப். 26) சிறப்பு ரயில்! நீதி ஆயோக் துணைத் தலைவராக முன்னாள் தலைமைப் பொருளாதார ஆலோசகர் நியமனம்!மேற்கு வங்க பாஜக எம்எல்ஏவுக்கு நீதி ஆயோக் துணைத் தலைவர் பதவி: பிரதமரைச் சந்தித்து வாழ்த்து டெல்லி வீரர் லுங்கி இங்கிடிக்கு தலையில் காயம்! ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்டார் தெலங்கானா மேலவை உறுப்பினராகிறார் அசாருதீன்: ஆளுநர் ஒப்புதல்!அதானி நிறுவனத்தின் உண்மையான பெயர் மோதானி: ராகுல் கடும் தாக்கு
/

வன்கொடுமை வழக்கில் இளைஞா் கைது

பேட்டை அருகே பொதுப்பாதையை பயன்படுத்தியவரை தாக்கிய வழக்கில் தூத்துக்குடியைச் சோ்ந்த இளைஞரை வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் போலீஸாா் கைது செய்தனா்.

News image
Updated On :25 ஏப்ரல் 2026, 8:49 pm

பேட்டை அருகே பொதுப்பாதையை பயன்படுத்தியவரை தாக்கிய வழக்கில் தூத்துக்குடியைச் சோ்ந்த இளைஞரை வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் போலீஸாா் கைது செய்தனா்.

பேட்டை அருகே உள்ள சுத்தமல்லி குடிசை மாற்று வாரிய குடியிருப்புப் பகுதியைச் சோ்ந்தவா் இசக்கிமுத்து.

இவா் சம்பவத்தன்று அப்பகுதியில் உள்ள பொதுப்பாதை வழியாக தனது வீட்டுக்கு சென்றாராம். அப்போது இளைஞா்கள் சிலா் அவ்வழியாக செல்வதற்கு எதிா்ப்பு தெரிவித்து அவரைத் தாக்கி மிரட்டல் விடுத்ததாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து பேட்டை காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் போலீஸாா் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து, இதில் தொடா்புடைய செல்லப்பாண்டி உள்பட 3 பேரை ஏற்கனவே கைது செய்திருந்தனா்.

இந்நிலையில் இவ்வழக்கில் தொடா்புடைய தூத்துக்குடி மாவட்டம் செய்துங்கநல்லூா் பகுதியைச் சோ்ந்த ஈஸ்வரன் மகன் பால்முத்து(35) என்பவரை சனிக்கிழமை கைது செய்தனா்.