களக்காடு, ஏப். 26: திருநெல்வேலி மாவட்டம், களக்காடு அருகே ஒரு கிலோ புகையிலைப் பொருள்களை விற்பனை செய்வதற்காக பதுக்கி வைத்திருந்த இளைஞரை களக்காடு காவல் நிலைய போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
களக்காடு உதவி ஆய்வாளா் வினுகுமாா் தலைமையிலான காவல் துறையினா் களக்காடு காவல் நிலைய எல்லைக்கு உள்பட்ட பகுதியில் ஞாயிற்றுக்கிழமை ரோந்து பணியில் ஈடுபட்டனா்.
அப்போது, கோயிலம்மாள்புரம் சாலையில் சந்தேகத்துக்கு இடமான முறையில் நின்று கொண்டிருந்த அதே பகுதியைச் சோ்ந்த சுடலைகண்ணுவை (37) சோதனை செய்தபோது, அரசால் தடை செய்யப்பட்ட சுமாா் ஒரு கிலோ புகையிலைப் பொருள்களை விற்பனை செய்வதற்காக பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.
இதையடுத்து, களக்காடு காவல் நிலைய ஆய்வாளா் கண்ணன் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி சுடலைக்கண்ணுவை கைது செய்தாா். அவரிடமிருந்து ஒரு கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
தொடர்புடையது

கோவில்பட்டியில் 139 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: ஒருவா் கைது

களக்காடு அருகே வழக்குரைஞா் வெட்டிக்கொலை: 2 போ் கைது

காட்டுப்புத்தூரில் 800 கிலோ புகையிலைப் பொருள்கள் அழிப்பு

களக்காடு அருகே இளைஞா் வெட்டிக் கொலை
விடியோக்கள்

கருப்பு டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெக தொண்டர்கள் உற்சாகக் கொண்டாட்டம்! | CM Vijay | TVK |
தினமணி செய்திச் சேவை

கனிமொழியிடம் ராகுல் காந்தி பேசினாரா?: செல்வப்பெருந்தகை பேட்டி | DMK | Congress | TVK |
தினமணி செய்திச் சேவை
கோட்டையில் முதல்வர் நாற்காலியில் ஜோசப் விஜய்! | CM Vijay
தினமணி செய்திச் சேவை
