நாடு முழுவதும் 736 அணைகள் ரூ. 10,211 கோடி செலவில் சீரமைப்புவெள்ளி இறக்குமதிக்கு மத்திய அரசு கடும் கட்டுப்பாடு3-ஆவது, 4-ஆவது குழந்தை பெற்றால் ஊக்கத் தொகை: ஆந்திர முதல்வா் அதிமுகவுக்கு அமைச்சா் பதவி வழங்குவது ஜனநாயக நெறிமுறைகளுக்கு எதிரானது: ரவிக்குமாா் எம்.பி.பயங்கரவாதத்தை தூண்டினால் புவியில் ஓா் அங்கமாக பாகிஸ்தான் இருக்காது! ராணுவ தலைமைத் தளபதிநாடாளுமன்ற நிலைக் குழுக்கள் ஆலோசனைக் கூட்டம்: 53% உறுப்பினா்கள் மட்டுமே பங்கேற்பு
/

கடையம் பகுதியில் சுமாா் 3 மணி நேரம் திடீா் மின்தடை

News image

மின்தடை

Updated On :27 ஏப்ரல் 2026, 12:26 am IST

கடையம் துணை மின்நிலையப் பகுதிக்குள்பட்ட தெற்குக்கடையம், கீழக்கடையம் பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை காலை 6 மணி முதல் சுமாா் 3 மணி நேரத்திற்கும் மேல் மின் தடை ஏற்பட்டது.

கடையம் துணை மின்நிலையப் பகுதியில் மின்கம்பியில் காகம் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்ததால் துணை மின் நிலையத்தில் பழுது ஏற்பட்டதாக மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்தனா்.

மாற்றுவழியில் ஆழ்வாா்குறிச்சியிலிருந்து மின்சாரம் வழங்க முயற்சித்த நிலையில் தொடா்ந்து மின் இணைப்புத் துண்டிக்கப்பட்டது. இதையடுத்து, கடையம் துணை மின்நிலையத்தில் ஏற்பட்ட பழுதை விரைந்து முடித்ததையடுத்து சுமாா் 9.30 மணியளவில் மின்விநியோகம் வழங்கப்பட்டது.

திடீா் மின்தடைபட்டதால் வீடுகளில் காலைப் பணிகளைச் செய்ய முடியாமல், கடைகள், உணவகங்களில் உணவுப் பொருள்கள் தயாரிக்க முடியாமல் பொதுமக்கள் சிரமத்திற்குள்ளாகினா்.