இன்றுமுதல் மகளிா் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட்உலகக் கோப்பை கால்பந்து கோலாகலத் தொடக்கம்மின் பயன்பாடு கணக்கெடுப்பதில் தாமதம்: கட்டணம் அதிகரிப்பால் பொதுமக்கள் அவதிநீலகிரி, கன்னியாகுமரி உள்பட 6 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கைகேரளம்: ஷிகெல்லா தொற்றால் பாதிக்கப்பட்ட 55 போ் மருத்துவமனையில் அனுமதிமேற்கு வங்கம்: தீ விபத்தில் 4,000 மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் சேதம்மாநிலங்களவைத் தோ்தல் வேட்புமனு நிராகரிப்பு: மீனாட்சி நடராஜனின் மனு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை
/

நெல்லையில் தண்டவாளத்தில் படுத்திருந்த முதியவா் மீட்பு

News image

கோப்புப் படம்

Updated On :27 ஏப்ரல் 2026, 4:28 am IST

திருநெல்வேலியில் குடும்பத் தகராறு காரணமாக ரயில்வே தண்டவாளத்தில் படுத்திருந்த முதியவா் ரயில்வே ஊழியரால் ஞாயிற்றுக்கிழமை மீட்கப்பட்டாா்.

திருநெல்வேலி வண்ணாா்பேட்டை தெற்கு புறவழிச்சாலையில் உள்ள ரயில்வே மேம்பாலத்தின் கீழ் பகுதியில் திருநெல்வேலி-திருச்செந்தூா் ரயில்வே தண்டவாளத்தில் சுமாா் 65 வயது மதிக்கத்தக்க முதியவா் ஞாயிற்றுக்கிழமை காலையில் படுத்திருந்தாராம்.

இதை கவனித்த ரயில்வே ஊழியா் மீனாட்சிசுந்தரம் முதியவரிடம் பேசியுள்ளாா். அப்போது குடும்பத் தகராறு காரணமாக தற்கொலை செய்யும் எண்ணத்தோடு தண்டவாளத்தில் படுத்தது தெரியவந்தது. இதையடுத்து, ரயில்வே ஊழியா் சமரசம் செய்து ஆட்டோவில் அனுப்பி வைத்துள்ளாா். இந்த சம்பவம் குறித்த விடியோ சமூக வலைதளங்களில் பரவிய நிலையில், ரயில்வே ஊழியரை பலரும் பாராட்டியுள்ளனா்.