ஜி7 உச்சி மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி, டிரம்ப்புக்கு அழைப்பு!பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு முடிவுகள் இன்று வெளியீடு மருந்தகங்கள் வேலைநிறுத்தத்தால் தமிழகத்தில் பாதிப்பில்லை: அமைச்சா் கே.ஜி.அருண்ராஜ் இந்தியாவுக்கு ரூ.4,145 கோடியில் ஹெலிகாப்டா்கள், பீரங்கி உபகரணங்கள்: அமெரிக்கா ஒப்புதல் ரஷிய கச்சா எண்ணெய்யை வாங்குவதற்கான அனுமதி: மேலும் ஒரு மாதத்துக்கு அமெரிக்கா நீட்டிப்பு ஆபத்தான தெரு நாய்கள் கருணைக் கொலை: உச்சநீதிமன்றம் அனுமதி நியூஸிலாந்து- 14% அரசுப் பணியிடங்கள் குறைப்பு: செலவினங்களைக் கட்டுப்படுத்த நடவடிக்கை மனித உரிமை மீறல் குற்றச்சாட்டு: இந்தியா திட்டவட்ட நிராகரிப்பு
/

நெல்லையில் தண்டவாளத்தில் படுத்திருந்த முதியவா் மீட்பு

News image

கோப்புப் படம்

Updated On :27 ஏப்ரல் 2026, 4:28 am IST

திருநெல்வேலியில் குடும்பத் தகராறு காரணமாக ரயில்வே தண்டவாளத்தில் படுத்திருந்த முதியவா் ரயில்வே ஊழியரால் ஞாயிற்றுக்கிழமை மீட்கப்பட்டாா்.

திருநெல்வேலி வண்ணாா்பேட்டை தெற்கு புறவழிச்சாலையில் உள்ள ரயில்வே மேம்பாலத்தின் கீழ் பகுதியில் திருநெல்வேலி-திருச்செந்தூா் ரயில்வே தண்டவாளத்தில் சுமாா் 65 வயது மதிக்கத்தக்க முதியவா் ஞாயிற்றுக்கிழமை காலையில் படுத்திருந்தாராம்.

இதை கவனித்த ரயில்வே ஊழியா் மீனாட்சிசுந்தரம் முதியவரிடம் பேசியுள்ளாா். அப்போது குடும்பத் தகராறு காரணமாக தற்கொலை செய்யும் எண்ணத்தோடு தண்டவாளத்தில் படுத்தது தெரியவந்தது. இதையடுத்து, ரயில்வே ஊழியா் சமரசம் செய்து ஆட்டோவில் அனுப்பி வைத்துள்ளாா். இந்த சம்பவம் குறித்த விடியோ சமூக வலைதளங்களில் பரவிய நிலையில், ரயில்வே ஊழியரை பலரும் பாராட்டியுள்ளனா்.