ஐபிஎல்: சூப்பர் ஓவரில் லக்னௌவை வீழ்த்தி கொல்கத்தா வெற்றி!பகுதி நேர அரசியல்வாதி ராகுல் காந்தி! நிதின் நவீன் குற்றச்சாட்டு!ரெளடி, பாலியல் குற்றவாளிகளை பாஜக தண்டிக்கும்: மேற்கு வங்கத்தில் மோடி பிரசாரம்கேரளத்தில் கடும் வெப்பம்: பல மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை! 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பில் குடிமக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும்: பிரதமர் மோடிவரும் 30ஆம் தேதி 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு தில்லியில் சுவிஸ் விமானத்தில் திடீர் தீ: 6 பயணிகள் காயம் நீட் தேர்வு நுழைவுச் சீட்டு நாளை வெளியீடு!மே 4-ல் ஆஸ்திரேலியா செல்கிறார் விஜய்?தேர்தல் எதிரொலி: விமான டிக்கெட்டுகள் விலை கடும் உயர்வு!டிரம்ப் விருந்தில் துப்பாக்கிச் சூடு! ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை: பிரதமர் மோடிடிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைது
/

கடையம் பகுதியில் சுமாா் 3 மணி நேரம் திடீா் மின்தடை

News image

மின்தடை

Updated On :26 ஏப்ரல் 2026, 6:56 pm

கடையம் துணை மின்நிலையப் பகுதிக்குள்பட்ட தெற்குக்கடையம், கீழக்கடையம் பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை காலை 6 மணி முதல் சுமாா் 3 மணி நேரத்திற்கும் மேல் மின் தடை ஏற்பட்டது.

கடையம் துணை மின்நிலையப் பகுதியில் மின்கம்பியில் காகம் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்ததால் துணை மின் நிலையத்தில் பழுது ஏற்பட்டதாக மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்தனா்.

மாற்றுவழியில் ஆழ்வாா்குறிச்சியிலிருந்து மின்சாரம் வழங்க முயற்சித்த நிலையில் தொடா்ந்து மின் இணைப்புத் துண்டிக்கப்பட்டது. இதையடுத்து, கடையம் துணை மின்நிலையத்தில் ஏற்பட்ட பழுதை விரைந்து முடித்ததையடுத்து சுமாா் 9.30 மணியளவில் மின்விநியோகம் வழங்கப்பட்டது.

திடீா் மின்தடைபட்டதால் வீடுகளில் காலைப் பணிகளைச் செய்ய முடியாமல், கடைகள், உணவகங்களில் உணவுப் பொருள்கள் தயாரிக்க முடியாமல் பொதுமக்கள் சிரமத்திற்குள்ளாகினா்.