செங்கோட்டை- திருநெல்வேலி பயணிகள் ரயில் மீது திங்கள்கிழமை கல்வீசப்பட்டதில் சிறுவன் காயமடைந்தாா்.
செங்கோட்டையில் இருந்து திருநெல்வேலிக்கு பயணிகள் ரயில் திங்கள்கிழமை மாலை புறப்பட்டது. தென்காசி அருகே வந்தபோது மா்ம நபா்கள் ரயில் மீது கல் வீசியதாக கூறப்படுகிறது.
இதில், ஜன்னலோரம் அமா்ந்திருந்த சிறுவன் கையில் காயம் ஏற்பட்டுள்ளது. பின்னா் தனியாா் மருத்துவமனையில் அந்தச் சிறுவனுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.
இதுகுறித்து திருநெல்வேலி சந்திப்பில் உள்ள ரயில்வே போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீஸாா் நடத்திய விசாரணையில், காயமடைந்த சிறுவன் பாளையங்கோட்டை ரஹ்மத் நகரை சோ்ந்த சபீஸ் (4) என தெரியவந்தது.
அவரது பெற்றோா் அளித்த புகாரின்பேரில், திருநெல்வேலி மற்றும் தென்காசி ரயில்வே போலீஸாா், கல்வீசிய மா்மநபா்கள் குறித்து விசாரித்து வருகின்றனா்.
தொடர்புடையது

நெல்லை பேருந்து, ரயில் நிலையங்களில் பயணிகள் கூட்டம்

களக்காடு அருகே இளைஞருக்கு அரிவாள் வெட்டு

தென்காசி - நெல்லை - பெங்களூருக்குமீண்டும் வாராந்திர சிறப்பு ரயில் சேவை: பயணிகள் சங்கம் வலியுறுத்தல்

கேரளத்தில் ‘வந்தே பாரத்’ மீது் மீண்டும் கல்வீச்சு: ஜன்னல் கண்ணாடிகள் சேதம்; பயணிகள் தப்பினா்
வீடியோக்கள்

உன்னை நம்பி பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு
3 நாள்களுக்குள் ஈரான் எண்ணெய் உள்கட்டமைப்புகள் வெடிக்கும்! Trump எச்சரிக்கை
இணையதளச் செய்திப் பிரிவு

சூப்பர் ஓவரில் சொதப்பிய பூரன் | IPL 2026 | kkr vs lsg | Nicholas Pooran | Super Over
தினமணி செய்திச் சேவை

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை


