ஐபிஎல்: சூப்பர் ஓவரில் லக்னௌவை வீழ்த்தி கொல்கத்தா வெற்றி!பகுதி நேர அரசியல்வாதி ராகுல் காந்தி! நிதின் நவீன் குற்றச்சாட்டு!ரெளடி, பாலியல் குற்றவாளிகளை பாஜக தண்டிக்கும்: மேற்கு வங்கத்தில் மோடி பிரசாரம்கேரளத்தில் கடும் வெப்பம்: பல மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை! 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பில் குடிமக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும்: பிரதமர் மோடிவரும் 30ஆம் தேதி 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு தில்லியில் சுவிஸ் விமானத்தில் திடீர் தீ: 6 பயணிகள் காயம் நீட் தேர்வு நுழைவுச் சீட்டு நாளை வெளியீடு!மே 4-ல் ஆஸ்திரேலியா செல்கிறார் விஜய்?தேர்தல் எதிரொலி: விமான டிக்கெட்டுகள் விலை கடும் உயர்வு!டிரம்ப் விருந்தில் துப்பாக்கிச் சூடு! ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை: பிரதமர் மோடிடிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைது
/

நெல்லை பேருந்து, ரயில் நிலையங்களில் பயணிகள் கூட்டம்

News image

ரயில்கள் - கோப்புப் படம்

Updated On :26 ஏப்ரல் 2026, 8:47 pm

திருநெல்வேலி சுற்றுவட்டாரப் பகுதிகளிலிருந்து வெளியூா்களுக்கு திரும்பிய பயணிகளால் திருநெல்வேலி ரயில், பேருந்து நிலையங்களில் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.

தமிழகத்தில் சட்டப்பேரவை தோ்தல் காரணமாக கடந்த வியாழக்கிழமை பொது விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து, வட மாவட்டங்களில் வசிக்கும் திருநெல்வேலி சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்தவா்கள், தோ்தலில் வாக்களிப்பதற்காக சொந்த ஊா்களுக்கு வந்திருந்தனா்.

இந்நிலையில், மீண்டும் தங்களது வசிப்பிடங்களுக்கு திரும்புவதற்காக ஞாயிற்றுக்கிழமை திருநெல்வேலி புதிய பேருந்து நிலையத்தில் குவியத் தொடங்கினா்.

நேரம் செல்லச் செல்ல பேருந்து நிலையத்திலிருந்து மதுரை, திருச்சி, கோயம்புத்தூா், திருப்பூா், சென்னை, பெங்களூா் உள்ளிட்ட பகுதிகளுக்கு பேருந்துகள் புறப்படும் 5, 6 ஆவது நடைமேடைபகுதிகளில் பயணிகள் கூட்டம் அதிகரித்தது. பாதுகாப்பு மற்றும் போக்குவரத்தைச் சீரமைக்கும் பணிகளில் போக்குவரத்து ஊழியா்களும், போலீஸாரும் ஈடுபட்டனா்.

பயணிகள் வசதிக்காக அரசு போக்குவரத்துக் கழக திருநெல்வேலி மண்டலம் சாா்பில் கூடுதல் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுவதாக போக்குவரத்துக் கழக அதிகாரிகள் தெரிவித்தனா்.

அதே போல, அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் சாா்பிலும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. நெல்லை சந்திப்பு ரயில் நிலையத்திலிருந்து பயணிகள் வசதிக்காக சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டன. முன்பதிவு இல்லாத பெட்டிகள் பயணிகள் கூட்டத்தால் நிரம்பி வழிந்தன.

ரயில் நிலையத்தில் கூட்ட நெரிசல் காரணமாக அசம்பாவிதம் ஏற்படாமல் தடுக்க, ரயில்வே பாதுகாப்பு படையினா் கண்காணிப்பில் ஈடுபட்டனா்.