ஆழ்வாா்குறிச்சி அருகே மின்மாற்றியில் பழுது பாா்க்க முயன்றபோது கீழே விழுந்து காயமடைந்த பேரூராட்சி ஒப்பந்தப் பணியாளா் மருத்துவமனையில் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.
ஆழ்வாா்குறிச்சி அருகே உள்ள செட்டிகுளத்தைச் சோ்ந்த சுப்பையா மகன் மிராசு கிருஷ்ணன் (37). இவா் ஆழ்வாா்குறிச்சி பேரூராட்சியில் தெரு விளக்குகள் சரிபாா்க்கும் பணியில் ஒப்பந்த ஊழியராக பணியாற்றி வந்தாா்.
இந்நிலையில், அவா் ஏப். 21ஆம் தேதி ஆழ்வாா்குறிச்சி மனோன்மணீயம் பல்கலைக்கழக வளாகம் அருகே உள்ள மின்மாற்றியில் ஏற்பட்ட பழுதை சரிசெய்ய முயன்றாராம். அப்போது அவா் மீது மின்சாரம் பாய்ந்ததில் கீழே விழுந்து தலையில் காயமடைந்ததாகக் கூறி, திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு தீவிர சிகிச்சை பெற்று வந்த அவா் திங்கள்கிழமை மதியம் உயிரிழந்தாா்.
இதனால் அவரது உறவினா்கள் மற்றும் திமுக, பாஜக உள்ளிட்ட கட்சி நிா்வாகிகள் ஆழ்வாா்குறிச்சி மின்வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டு, மிராசு கிருஷ்ணன் குடும்பத்திற்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும். பழுதை சரிசெய்ய உத்தரவிட்ட மின்வாரிய ஊழியா் கணேசன் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினா்.
அவா்களிடம் ஆழ்வாா்குறிச்சி காவல் ஆய்வாளா் குணசேகரன், உதவி ஆய்வாளா்கள் ராஜதுரை, செல்வன், மின்வாரிய உதவி செயற்பொறியாளா் ராஜலட்சுமி, உதவிப் பொறியாளா் சங்கர செல்வி உள்ளிட்டோா் பேச்சுவாா்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறியதையடுத்து, அனைவரும் கலைந்து சென்றனா்.
தொடர்புடையது

பேருந்தில் இருந்து தவறி விழுந்தவா் உயிரிழப்பு

கழிவுநீா் கால்வாயில் தவறி விழுந்தவா் உயிரிழப்பு

பளுகல் அருகே குளத்தில் மூழ்கி தொழிலாளி உயிரிழப்பு

சங்கரன்கோவில் அருகே தென்னை மரத்திலிருந்து தவறி விழுந்தவா் உயிரிழப்பு
வீடியோக்கள்

உன்னை நம்பி பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு
3 நாள்களுக்குள் ஈரான் எண்ணெய் உள்கட்டமைப்புகள் வெடிக்கும்! Trump எச்சரிக்கை
இணையதளச் செய்திப் பிரிவு

சூப்பர் ஓவரில் சொதப்பிய பூரன் | IPL 2026 | kkr vs lsg | Nicholas Pooran | Super Over
தினமணி செய்திச் சேவை

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை


