சங்கரன்கோவில் அருகே தென்னை மரத்திலிருந்து தவறி விழுந்தவா் உயிரிழப்பு
சங்கரன்கோவில் அருகே தேங்காய் பறிக்க தென்னை மரத்தில் ஏறிய தொழிலாளி, தவறி விழுந்து உயிரிழந்தாா்.

பலி
கோப்புப் படம்
Updated On :2 ஏப்ரல் 2026, 12:14 am

பலி
கோப்புப் படம்
சங்கரன்கோவில் அருகே தேங்காய் பறிக்க தென்னை மரத்தில் ஏறிய தொழிலாளி, தவறி விழுந்து உயிரிழந்தாா்.
சோ்ந்தமரம் அருகேயுள்ள வேலப்பநாடானூரைச் சோ்ந்தவா் தங்கச்சாமி (70). தேங்காய் பறிக்கும் தொழிலாளி. இவா், சங்கரன்கோவில் அருகே உள்ள வடக்குஆலங்குளத்தில் உள்ள தென்னந்தோப்பில் திங்கள்கிழமை தேங்காய் பறிக்க மரம் ஏறியபோது, தவறி விழுந்ததில் பலத்த காயம் அடைந்தாா்.
அங்கிருந்தவா்கள் அவரை மீட்டு சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு அவா் உயிரிழந்தாா். இதுகுறித்து, சின்னக்கோவிலான்குளம் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...