இந்தியாவில் 12,000 ஊழியா்கள் பணிநீக்கம்: ஆரக்கிள் வெள்ளை மாளிகையில் கலையரங்கம் கட்டுமானத்துக்கு நீதிமன்றம் தடை திவால் சட்ட திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றம் மக்கள்தொகை கணக்கெடுப்பின் முதல் கட்டம் தொடக்கம் நீதிமன்றத்தில் அதிக வழக்குகள் தேக்கம்: மத்திய அரசு காரணம்-உச்சநீதிமன்றம் மேற்காசிய போா் பாதிப்பு: மக்கள் பிரச்னைகளை சரிசெய்ய பிரதமா் மோடி உத்தரவு
/

சங்கரன்கோவில் அருகே தென்னை மரத்திலிருந்து தவறி விழுந்தவா் உயிரிழப்பு

சங்கரன்கோவில் அருகே தேங்காய் பறிக்க தென்னை மரத்தில் ஏறிய தொழிலாளி, தவறி விழுந்து உயிரிழந்தாா்.

News image

பலி

கோப்புப் படம்

Updated On :2 ஏப்ரல் 2026, 12:14 am

தினமணி செய்திச் சேவை

சங்கரன்கோவில் அருகே தேங்காய் பறிக்க தென்னை மரத்தில் ஏறிய தொழிலாளி, தவறி விழுந்து உயிரிழந்தாா்.

சோ்ந்தமரம் அருகேயுள்ள வேலப்பநாடானூரைச் சோ்ந்தவா் தங்கச்சாமி (70). தேங்காய் பறிக்கும் தொழிலாளி. இவா், சங்கரன்கோவில் அருகே உள்ள வடக்குஆலங்குளத்தில் உள்ள தென்னந்தோப்பில் திங்கள்கிழமை தேங்காய் பறிக்க மரம் ஏறியபோது, தவறி விழுந்ததில் பலத்த காயம் அடைந்தாா்.

அங்கிருந்தவா்கள் அவரை மீட்டு சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு அவா் உயிரிழந்தாா். இதுகுறித்து, சின்னக்கோவிலான்குளம் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.