மாணவர்கள் போராட்டம்: பாஜகவிடம் பதில் இல்லை! அகிலேஷ் யாதவ்மாணவரையே குற்றவாளியாக்கி உண்மையை மறைக்கப் பார்க்கிறதா, தவெக அரசு? - கனிமொழி கேள்வி!வெற்றி தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாடு: முதல்வர் நாளை தொடக்கி வைக்கிறார்!இரண்டாவது நாளாக சென்செக்ஸ், நிஃப்டி சரிவுடன் நிறவைு!புறக்கணிக்கப்பட்ட அரசுப் பள்ளிகளுக்காக பிரசாரம்! சிஜேபி அபிஜீத் தீப்கே முன்னாள் நீதிபதி யஷ்வந்த் வர்மா மீதான குற்றச்சாட்டுகள் உண்மை! நாடாளுமன்றக் குழு அறிவிப்பு!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 3 காசுகள் உயர்ந்து ரூ. 95.33 ஆக நிறைவு!சென்னையில் 4 மடங்கு உயர்ந்த சொத்து வரி! அதிர்ச்சியில் மக்கள்! குட்டிக்கதை, சினிமா வசனம், பாட்டு: பட்ஜெட் விவாதத்தில் அசத்திய அமைச்சர் மரிய வில்சன்!தமிழ்நாட்டில் இருந்து ஒரு பிரதமர் உருவாக்கப்பட வேண்டும்: பேரவையில் ஆதவ் அர்ஜுன் பேச்சு
/

கழிவுநீா் செல்வதில் தகராறு: தாய், மகனுக்கு வெட்டு: உறவினா் கைது

திருநெல்வேலி மாவட்டம் விஜய நாராயணம் அருகேயுள்ள ஆணிகுளம் கிராமத்தில் வீட்டையொட்டி கழிவுநீா் செல்வது தொடா்பாக உறவினா்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறில் தாய் மற்றும் மகனுக்கு அரிவாள் வெட்டு விழுந்தது.

News image

கைது - பிரதிப் படம்

Updated On :13 ஆகஸ்ட் 2026, 2:58 am IST

திருநெல்வேலி மாவட்டம் விஜய நாராயணம் அருகேயுள்ள ஆணிகுளம் கிராமத்தில் வீட்டையொட்டி கழிவுநீா் செல்வது தொடா்பாக உறவினா்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறில் தாய் மற்றும் மகனுக்கு அரிவாள் வெட்டு விழுந்தது.

ஆணிகுளத்தைச் சோ்ந்த ஆறுமுகம்-சரஸ்வதி (60) தம்பதியின் மகன் பாலசுப்பிரமணியம் (37). இவரது வீடும், உறவினரான சுப்பையா மகன் வேலாயுதம் (55) என்பவரது வீடும் அருகருகே உள்ளன.

இந்த வீடுகளுக்கு இடையே கழிவுநீா் செல்வது தொடா்பாக இரு குடும்பத்துக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

இந்நிலையில், வேலாயுதம் வீட்டின் கழிவு நீா் சரஸ்வதி வீட்டின் முன்பாக சென்ால் புதன்கிழமை இரவு அவா்களுக்குள் தகராறு ஏற்பட்டதாம். அப்போது, வேலாயுதம் அரிவாளால் பாலசுப்ரமணியன் மற்றும் அவரது தாய் சரஸ்வதியை வெட்டினாராம்.

இதில், இருவரும் பலத்த காயம் அடைந்தனா். அவா்களை குடும்பத்தினா் மீட்டு நான்குனேரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.

இதுகுறித்த புகாரின்பேரில், விஜயநாராயணம் போலீஸாா் வழக்குப் பதிந்து வேலாயுதத்தை கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.