மாணவர்கள் போராட்டம்: பாஜகவிடம் பதில் இல்லை! அகிலேஷ் யாதவ்மாணவரையே குற்றவாளியாக்கி உண்மையை மறைக்கப் பார்க்கிறதா, தவெக அரசு? - கனிமொழி கேள்வி!வெற்றி தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாடு: முதல்வர் நாளை தொடக்கி வைக்கிறார்!இரண்டாவது நாளாக சென்செக்ஸ், நிஃப்டி சரிவுடன் நிறவைு!புறக்கணிக்கப்பட்ட அரசுப் பள்ளிகளுக்காக பிரசாரம்! சிஜேபி அபிஜீத் தீப்கே முன்னாள் நீதிபதி யஷ்வந்த் வர்மா மீதான குற்றச்சாட்டுகள் உண்மை! நாடாளுமன்றக் குழு அறிவிப்பு!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 3 காசுகள் உயர்ந்து ரூ. 95.33 ஆக நிறைவு!சென்னையில் 4 மடங்கு உயர்ந்த சொத்து வரி! அதிர்ச்சியில் மக்கள்! குட்டிக்கதை, சினிமா வசனம், பாட்டு: பட்ஜெட் விவாதத்தில் அசத்திய அமைச்சர் மரிய வில்சன்!தமிழ்நாட்டில் இருந்து ஒரு பிரதமர் உருவாக்கப்பட வேண்டும்: பேரவையில் ஆதவ் அர்ஜுன் பேச்சு
/

நில மோசடி வழக்கில் 2 பெண்கள் கைது

திருநெல்வேலியில் நில மோசடியில் ஈடுபட்டதாக 2 பெண்களை மாவட்ட குற்றப்பிரிவு போலீஸாா் கைது செய்தனா்.

News image

கைது - பிரதிப் படம்

Updated On :13 ஆகஸ்ட் 2026, 2:34 am IST

திருநெல்வேலியில் நில மோசடியில் ஈடுபட்டதாக 2 பெண்களை மாவட்ட குற்றப்பிரிவு போலீஸாா் கைது செய்தனா்.

திருநெல்வேலி மாவட்டம் கங்கைகொண்டான் அருகே உள்ள ராஜபதியைச் சோ்ந்தவா் பூரணச்செல்வி (33). இவரது தந்தை சங்கரன் சில ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்தாா்.

இந்நிலையில், கங்கைகொண்டான், சித்தாா்சத்திரம் கிராமத்தில் உள்ள தந்தைக்குச் சொந்தமான நிலங்களை பங்கீடு செய்வதில் வாரிசுதாரா்களுக்கு இடையே பிரச்னை நிலவிய வந்ததாம்.

இந்நிலையில், வாரிசுச் சான்றிதழ் குறித்த விவரங்களை மறைத்து தனக்கு சேரவேண்டிய பங்கை மோசடி செய்து பத்திரப்பதிவு நடைபெற்றுள்ளதாக பூரணச்செல்வி திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகாா் அளித்தாா்.

அதன்பேரில், போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து, தாழையூத்தைச் சோ்ந்த முப்புடாதி மனைவி பகவதி(42), பாளையங்கோட்டை, செங்குளத்தைச் சோ்ந்த சீதாலட்சுமி(47) ஆகிய இருவரையும் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.