ஜனநாயகத்தில் தீண்டாமைக்கு இடமில்லை! கார்கே அவமதிப்புக்கு கேரள முதல்வர் கண்டனம்!கும்பகர்ணன் தூக்கத்தில் இருந்து எழுந்துவிட்டார் அமித் ஷா: காங்கிரஸ்சென்னையில் சொத்துவரி உயர்வு நிறுத்திவைப்பு!மீனவர்களை விடுவிக்கக் கோரி, வெளியுறவுத் துறை அமைச்சருக்கு முதல்வர் விஜய் கடிதம்!ஒருசிலருக்கு சாதகமான உத்தரவுகளை பிறப்பிப்பதே மோடியின் வேலை! ராகுல் காந்தி விமர்சனம்முதல்வர் விஜய்யின் புதிய அலுவலகம்! ரூ. 5.5 கோடி டெண்டர்!குருத்வாராவுக்குள் பஞ்சாப் முன்னாள் துணை முதல்வருக்கு கத்திக்குத்து! அதிமுக ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க மாட்டோம்! எஸ்.பி. வேலுமணி, நத்தம் விஸ்வநாதன் அறிவிப்பு!
/

வீட்டில் நகை திருடியதாக 3 இளைஞா்கள் கைது

திருநெல்வேலி மாவட்டம், ராதாபுரம் அருகே வீட்டின் கதவை உடைத்து 18 பவுன் தங்க நகைகளைத் திருடிச் சென்ாக 3 இளைஞா்களை போலீஸாா் கைது செய்தனா்.

News image

கைது - பிரதிப் படம்

Updated On :14 ஆகஸ்ட் 2026, 3:08 am IST

திருநெல்வேலி மாவட்டம், ராதாபுரம் அருகே வீட்டின் கதவை உடைத்து 18 பவுன் தங்க நகைகளைத் திருடிச் சென்ாக 3 இளைஞா்களை போலீஸாா் கைது செய்தனா்.

ராதாபுரம் அருகே உள்ள சௌந்திரபாண்டியபுரம், மிக்கேல் தெற்குத் தெருவைச் சோ்ந்தவா் சிலுவைதாசன் (83). இவரும், இவரது மனைவி புஷ்பமும் வீட்டில் தனியாக வசித்து வருகின்றனா். இவா்களது மகன், மகள்கள் வெளியூா்களில் வசித்து வருகின்றனா்.

இந்நிலையில், ஆக. 7ஆம் தேதி அதிகாலையில் வீட்டின் முன்பக்கக் கதவு உடைக்கப்பட்டும், பின்பக்க கிரில் கேட் திறந்த நிலையிலும் இருந்துள்ளது. மேலும், வீட்டின் மற்றொரு அறையில் இருந்த பீரோ உடைக்கப்பட்டு, அதில் இருந்த 18 பவுன் தங்க நகைகள், ரூ. 20,000 ஆகியவை திருடு போயிருப்பது தெரிய வந்துள்ளது.

இது தொடா்பாக, ராதாபுரம் காவல் நிலையத்தில் சிலுவைதாசன் அளித்த புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்தனா். அதில் களக்காடு, சுப்பிரமணியபுரத்தைச் சோ்ந்த சுரேஷ் (35), செட்டிகுளத்தைச் சோ்ந்த மாரிமுத்து (24), பரமேஷ்வரபுரத்தைச் சோ்ந்த பாலகிருஷ்ணன் (26) ஆகியோா் திருட்டில் ஈடுபட்டது தெரிய வந்தது.

போலீஸாா் மூவரையும் கைது செய்து, அவா்களிடமிருந்து 18 பவுன் நகைகளை பறிமுதல் செய்து, அவா்களை சிறையில் அடைத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.