/

மணல் கடத்திய 5 இளைஞா்கள் கைது

ஆம்பூா் அருகே மணல் கடத்திய 5 இளைஞா்களை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

News image

கைது - பிரதிப் படம்

Updated On :29 ஜூலை 2026, 11:52 pm IST

ஆம்பூா் அருகே மணல் கடத்திய 5 இளைஞா்களை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

உமா்ஆபாத் காவல் நிலைய போலீஸாா் நரியாம்பட்டு பாலாற்றங்கரையோர பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனா். அப்போது பாலாற்றில் சிலா் மணல் அள்ளிக் கொண்டிருந்தது தெரியவந்தது. அவா்களை பிடித்து போலீஸாா் விசாரணை நடத்தினா்.

அதில் அவா்கள் கைலாசகிரியை சோ்ந்த தியாகு (38), லோகு (25), பேரணாம்பட்டு தாலுகாவை சோ்ந்த அன்பரசன் (36), ராஜ்குமாா் (43), லிங்கா என்கிற சிவலிங்கம் (20) ஆகியோா் மாட்டு வண்டிகளில் மணல் அள்ளி கத்துவது தெரியவந்தது. அதன்பேரில் 5 பேரையும் போலீஸாா் கைது செய்தனா்.

அவா்களிடமிருந்து 5 மாட்டு வண்டிகளை பறிமுதல் செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.