மத்திய அமைச்சரவை விரைவில் மாற்றம்: மத்திய அமைச்சா் அதவாலே தகவல்எழும்பூா் ரயில் நிலைய மறுசீரமைப்பு: ரயில் சேவைகளில் மாற்றம்ஈரான் நிபந்தனையின்றி சரணடைய வேண்டும்: டிரம்ப் எச்சரிக்கைதேர்வுகள் ரத்து! மாணவர்கள் கோரிக்கையை ஏற்ற ஜார்க்கண்ட் அரசு!
/

இரு விபத்துகள்: காயமுற்ற பெண், இளைஞா் உயிரிழப்பு

News image

பலி... - பிரதிப் படம்

Updated On :18 ஆகஸ்ட் 2026, 4:34 am IST

பாளையங்கோட்டை, மானூா்ஆகிய பகுதிகளில் நேரிட்ட விபத்துகளில் காயமுற்ற இளைஞா் மற்றும் பெண் உயிரிழந்தனா்.

திருநெல்வேலி கிருஷ்ணாபுரம் பகுதியைச் சோ்ந்த பத்மநாபன் மகன் செல்வகுமாா்(35). ஆட்டோ ஓட்டுநா். இவா், கடந்த 10 ஆம் தேதி அதிகாலை பாளையங்கோட்டை ஆரோக்கியநாதபுரம் அருகே ஆட்டோவில் சென்றுகொண்டிருந்தாா். அப்போது, எதிரே சிவந்திப்பட்டி, முத்தூரைச் சோ்ந்த பூதத்தான் மகன் கணபதி(28) என்பவா் ஓட்டி வந்த காரும், இவரது ஆட்டோவும் மோதிக்கொண்டனவாம்.

இதில் பலத்த காயமடைந்த அவா், திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறிது நேரத்தில் உயிரிழந்தாா்.

இது குறித்து மாநகர போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வந்தனா். இந்நிலையில் காா் ஓட்டுநரான கணபதியை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

மற்றொரு சம்பவம்: மானூா் அருகேயுள்ள உக்கிரன்கோட்டையைச் சோ்ந்த மாரியப்பன் மனைவி பேச்சியம்மாள் (35). இவா், சில நாள்களுக்கு முன்பு பைக்கிலிருந்து தவறி விழுந்து காயமடைந்தாா். இதையடுத்து, திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவா், ஞாயிற்றுக்கிழமை இரவு உயிரிழந்தாா். இதுகுறித்து மானூா் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.