ஏா்வாடி அருகே நம்பியாற்றில் மீன்பிடி வலையில் சிக்கிய மலைப்பாம்பை, தன்னாா்வ அமைப்பின் உதவியோடு வனத்துறையினா் மீட்டு அடா்ந்த காட்டுப்பகுதியில் விட்டனா்.
நம்பியாற்றில் மீன்பிடிப்பதற்காக வைக்கப்பட்டிருந்த வலையில் மலைப்பாம்பு சிக்கிக் கொண்டது.
இது குறித்த தகவலின்பேரில், கிரீன்கோ் அமைப்பின் திருநெல்வேலி மாவட்ட ஒருங்கிணைப்பாளா் ஷேக், தலைவா் சையது ஆகியோா் அப்பகுதி தன்னாா்வலா்களின் உதவியுடன் போராடி, அந்த மலைப்பாம்பை மீட்டு திருக்குறுங்குடி வனத்துறையினரிடம் ஒப்படைத்தனா்.
பின்னா் அந்தப் பாம்பு வனத்துறையினா் மூலம் திருக்குறுங்குடியில் உள்ள அடா்ந்த வனப் பகுதியில் விடப்பட்டது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







