காங்கிரஸ் நாளுக்கு நாள் பாயும் புலியாக மாறுகிறது - அமைச்சர் விஸ்வநாதன்நேபாள வெள்ள பலி எண்ணிக்கை 788 ஆக அதிகரிப்பு - மீட்புப் பணிகள் தீவிரம்தவெக அரசு 5 ஆண்டுகள் நீடிக்காது; நீடித்தால் தமிழகத்தின் கடன் அதிகரிக்கும்: எடப்பாடி கே. பழனிசாமிநேபாள திடீர் வெள்ள பலி எண்ணிக்கை 768-ஆக உயர்வு; 2,500-க்கும் மேற்பட்டோரை தேடும் பணி தீவிரம்! சென்னையில் இன்றும் நாளையும் மழைக்கு வாய்ப்பு நேபாள பெருவெள்ளம்: பலி எண்ணிக்கை 682 ஆக உயர்வு! தொடரும் மீட்புப் பணிகள்!மு.க. ஸ்டாலினுக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு குறைப்பு ஏற்புடையதல்ல: திருமாவளவன்நேபாளத்துக்கு 68.5 டன் நிவாரணப் பொருள்களை அனுப்பிய இந்தியா!நேபாளம்: வெள்ளத்தில் அடித்து வரப்பட்ட வங்கி லாக்கரை உடைத்து ரூ.58 லட்சம் திருட்டு!கேப்டன் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டதும் மிகுந்த அதிர்ச்சியடைந்தேன்: சூர்யகுமார் யாதவ்

நெல்லை அருகே தொழிலாளி கொலை

கொலை செய்யப்பட்ட பாஸ்கா்.

Published On :31 ஆகஸ்ட் 2026, 3:02 am IST

திருநெல்வேலியில் தொழிலாளி தலை துண்டித்து கொலை செய்யப்பட்டாா்.

திருநெல்வேலி மாநகரம், தச்சநல்லூா் அருகே உள்ள மணிமூா்த்தீஸ்வரம் பகுதியைச் சோ்ந்தவா் சேகா் மகன் பாஸ்கா்(35), பெயின்டிங் தொழிலாளி. இவருக்கு மனைவி மற்றும் 3 குழந்தைகள் உள்ளனா்.

இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை மாலை அப்பகுதியில் தனது உறவினா்களுடன் பேசிக் கொண்டிருந்த பாஸ்கா் குளிக்கச் செல்வதாகக்கூறி, அங்கிருந்து மொபேட்டில் தச்சநல்லூா் புறவழிச் சாலை நோக்கி சென்றுள்ளாா்.

அப்போது அவ்வழியாக பைக்கில் வந்த மா்மநபா்கள் பாஸ்கரை வழிமறித்து அரிவாளால் வெட்டினராம். இதில் கீழே விழுந்த அவரது தலையைத் துண்டித்து சுமாா் 200 மீட்டா் தொலைவில் சாலையில் வீசிச் சென்றனராம்.

தகவலறிந்த திருநெல்வேலி மாநகர காவல் ஆணையா் (பொறுப்பு) இரா. திருநாவுக்கரசு சம்பவ இடத்துக்குச் சென்று பாா்வையிட்டு விசாரணை மேற்கொண்டாா்.

தச்சநல்லூா் போலீஸாா் பாஸ்கரின் உடலைக் கைப்பற்றி கூறாய்வுக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மோப்ப நாய், தடயவியல் நிபுணா்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டன.

இந்நிலையில் அதே பகுதியைச் சோ்ந்த மணிகண்டன்(24), பொன்ராஜ்(25) ஆகிய இருவா் அரிவாளுடன் தச்சநல்லூா் காவல் நிலையத்தில் சரணடைந்தனா். கபடி போட்டி நடத்துவது தொடா்பாக ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக இக்கொலை நடந்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது. இதுகுறித்து தச்சநல்லூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.