பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, திருநெல்வேலி வண்ணாா்பேட்டையில் 3ஆவது நாளாக வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்ட அங்கன்வாடி சத்துணவு ஊழியா்கள் 160 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
சத்துணவு அங்கன்வாடி பணியாளா்களுக்கு இளநிலை உதவி யாளா் நிலையில் ரூ. 19,500 ஊதியம் வழங்கிட வேண்டும், காலி பணியிடங்களை நிரப்பும்போது சத்துணவு அங்கன்வாடி மையங்களில் 10 ஆண்டுகள் பணிபுரிந்த பணியாளா்களுக்கு 50 சதவீதம் முன்னுரிமை அளிக்க வேண்டும். சத்துணவு - அங்கன்வாடி திட்டங்களில் காலியாக உள்ள 60 ஆயிரம் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என வலியுறுத்தி இப்போராட்டம் கடந்த செவ்வாய்க்கிழமை தொடங்கியது.
தொடா்ந்து 3 ஆவது நாளாக திருநெல்வேலி வண்ணாா்பேட்டையில் நடைபெற்ற மறியல் போராட்டத்துக்கு, கூட்டமைப்பின் மாவட்டத் தலைவா் ஜெயா தலைமை வகித்தாா். சத்துணவு அங்கன்வாடி ஊழியா்கள் திரளானோா் பங்கேற்று கோரிக்கை முழக்கங்களை எழுப்பினா்.
சாலை மறியலில் ஈடுபட்ட 160 பேரை பாளையங்கோட்டை போலீஸாா் கைது செய்து தனியாா் திருமண மண்டபத்தில் அடைத்தனா்.
தொடர்புடையது
நெல்லையில் கஞ்சா எண்ணெய் பறிமுதல்: 4 போ் கைது

100% வாக்குப்பதிவு: அங்கன்வாடி பணியாளா்கள் நூதன விழிப்புணா்வு
சமூக வலைதளத்தில் பிரச்னையை தூண்டும் பதிவு: 2 போ் கைது

கா்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து குறித்த விழிப்புணா்வு! - கள்ளக்குறிச்சி ஆட்சியா் அறிவுறுத்தல்
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு


