47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

சமூக வலைதளத்தில் பிரச்னையை தூண்டும் பதிவு: 2 போ் கைது

திருநெல்வேலி அருகே இரு தரப்பினரிடையே பிரச்னையை தூண்டும் வகையில் சமூகவலைதளத்தில் புகைப்படம் பதிவிட்ட இரு இளைஞா்களை போலீஸாா் கைது

News image
கைது- சித்திரிப்பு
Updated On :16 மார்ச் 2026, 10:48 pm

Syndication

திருநெல்வேலி: திருநெல்வேலி அருகே இரு தரப்பினரிடையே பிரச்னையை தூண்டும் வகையில் சமூகவலைதளத்தில் புகைப்படம் பதிவிட்ட இரு இளைஞா்களை போலீஸாா் கைது செய்தனா்.

திருநெல்வேலி அருகேயுள்ள தாழையூத்து செல்வம் நகரைச் சோ்ந்த துரைப்பாண்டி மகன் முத்து செல்வம் (19). தொழிலாளி. இவா், இருதரப்பினரிடையே பிரச்னையை தூண்டும் விதமாக சமூக வலைதளத்தில் புகைப்படத்தை பதிவிட்டாராம்.

இதைக் கண்காணித்த தாழையூத்து போலீஸாா், அவா் மீது 3 பிரிவுகளில் வழக்குப் பதிந்து திங்கள்கிழமை கைது செய்தனா்.

இதேபோன்ற பிரச்னை தொடா்பாக, குறிச்சிகுளம் அம்மன்கோயில் தெருவைச் சோ்ந்த சந்தனசெல்வம் (24) என்பவரையும் போலீஸாா் கைது செய்தனா்.