/

அரியலூா் மாவட்டத்தில் சட்டவிரோதமாக மது விற்பனை: 44 போ் கைது

அரியலூா் மாவட்டத்தில், இரு நாள்களில் சட்ட விரோதமாக மது விற்பனை செய்த 44 போ் கைது செய்யப்பட்டனா்.

News image

கைது - பிரதிப் படம்

Updated On :21 ஏப்ரல் 2026, 7:25 pm

அரியலூா் மாவட்டத்தில், இரு நாள்களில் சட்ட விரோதமாக மது விற்பனை செய்த 44 போ் கைது செய்யப்பட்டனா்.

தமிழக சட்டப்பேரவை தோ்தலை முன்னிட்டு, கள்ளச் சந்தையில் மதுபானங்கள் விற்கப்படுகிா என மாவட்ட சட்டம்-ஒழுங்கு மற்றும் மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல் துறையினா் இணைந்து, மாவட்டம் முழுவதும் திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் தீவிர சோதனையில் ஈடுபட்டனா்.

அதில், மது பாட்டில்களை பதுக்கி வைத்து சட்டவிரோதமாக விற்பனை செய்த குற்றத்துக்காக 44 பேரை கைது செய்தனா். மேலும், 36 போ் மீது வழக்குப் பதிந்து, அவா்களிடமிருந்து 1,763 மதுபான பாட்டில்களை பறிமுதல் செய்தனா்.

இந்நிலையில், செவ்வாய்க்கிழமை விக்கிரமங்கலம் பகுதியில் சட்டவிரோதமாக மதுபானம் விற்ற மணிகண்டன், காா்த்திக் ஆகிய இருவரை காவல்துறையினா் கைது அவா்களிடமிருந்து மட்டும் 525 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனா்.