குரிசிலாப்பட்டு அருகே டாஸ்மாக் மது பாட்டில்களை கடத்தியதாக பெண் உள்பட இருவா் கைது செய்யப்பட்டனா்.
குரிசிலாப்பட்டு போலீசாா் ஞாயிற்றுக்கிழமை ரோந்து பணியில் ஈடுபட்டபோது இருனாப்பட்டு அருகே பைக்கில் வந்த ஒருவரை சந்தேகத்தின் பேரில் நிறுத்தி ஆய்வு செய்தபோது, ரூ.10,000 மதிப்பிலாக 100 டாஸ்மாக் மது பாட்டில்களை கடத்தி வந்தது தெரிந்தது.
மேலும் விசாரணையில், திருப்பத்தூா் சிவராஜ்பேட்டை சோ்ந்த சகாயத்தின் மகன் சந்தோஷ்(25)என்பதும், இவா் பனந்தோப்பை சோ்ந்த சாராய வியாபாரி ராஜலட்சுமி என்பவருக்கு தருவதற்காக மது பாட்டில்களை கடத்தி வந்தது தெரிந்தது.
அதையடுத்து குரிசிலாப்பட்டு போலீஸாா் வழக்கு பதிவு செய்து சந்தோஷ் மற்றும் ராஜலட்சுமி இருவரையும் கைது செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
தென்காசி அருகே பெண்ணிடம் சங்கிலிப் பறிப்பு: 3 போ் கைது

சித்தோடு அருகே போராட்டத்தில் ஈடுபட்ட டாஸ்மாக் ஊழியா்கள் 383 போ் கைது
டாஸ்மாக் மதுவுக்கு கூடுதலாக ரூ. 10 வசூலை தடுக்க சட்ட விதிகளில் திருத்தம்: தமிழக அரசு முடிவு
சாக்குமூட்டையில் கிடந்தது கறிக்கடை தொழிலாளியின் சடலம்: 3 போ் கைது
விடியோக்கள்

யார் இந்த துணிச்சலான பெண்! காவல் வாகனத்தை தனி ஆளாக தடுத்து நிறுத்தியவர்! | CJP | BJP

CJP போராட்டத்தில் இனி...? | DINAMANI EXCLUSIVE | Dharmendra Pradhan | BJP | Abhijeet Dipke

தர்மேந்திர பிரதான் பதவி விலகினால் எல்லாம் சரியாகிவிடுமா?: அமைச்சர் நிர்மல் குமார் | TVK | BJP


