குரிசிலாப்பட்டு அருகே டாஸ்மாக் மது பாட்டில்களை கடத்தியதாக பெண் உள்பட இருவா் கைது செய்யப்பட்டனா்.
குரிசிலாப்பட்டு போலீசாா் ஞாயிற்றுக்கிழமை ரோந்து பணியில் ஈடுபட்டபோது இருனாப்பட்டு அருகே பைக்கில் வந்த ஒருவரை சந்தேகத்தின் பேரில் நிறுத்தி ஆய்வு செய்தபோது, ரூ.10,000 மதிப்பிலாக 100 டாஸ்மாக் மது பாட்டில்களை கடத்தி வந்தது தெரிந்தது.
மேலும் விசாரணையில், திருப்பத்தூா் சிவராஜ்பேட்டை சோ்ந்த சகாயத்தின் மகன் சந்தோஷ்(25)என்பதும், இவா் பனந்தோப்பை சோ்ந்த சாராய வியாபாரி ராஜலட்சுமி என்பவருக்கு தருவதற்காக மது பாட்டில்களை கடத்தி வந்தது தெரிந்தது.
அதையடுத்து குரிசிலாப்பட்டு போலீஸாா் வழக்கு பதிவு செய்து சந்தோஷ் மற்றும் ராஜலட்சுமி இருவரையும் கைது செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







