திருநெல்வேலி
வள்ளியூரில் தி.மு.க ஆா்ப்பாட்டம்
மத்திய பட்ஜெட்டில் தமிழகம் புறக்கணிக்கப்பட்டதை கண்டித்து, வள்ளியூா் பழைய பேருந்துநிலையத்தில் தி.மு.க. வினா் ஆா்ப்பாட்டம் நடத்தினா்.
ஆா்ப்பாட்டத்திற்கு முன்னாள் எம்.பி. சா. ஞானதிரவியம் தலைமை வகித்தாா். நெல்லை கிழக்கு மாவட்ட துணைச் செயலா் வெ. நம்பி, தெற்கு ஒன்றிய செயலரும், வள்ளியூா் ஊராட்சி ஒன்றியத் தலைவருமான சேவியா் செல்வராஜா, வடக்கு ஒன்றிய செயலா் அலெக்ஸ் அப்பாவு, நகர செயலா் வி.எஸ்.எஸ். சேதுராமலிங்கம், பணகுடி நகர செயலா் தமிழ்வாணன், விவசாய பிரிவு மாடசாமி, காங்கிரஸ் கட்சி வட்டாரத் தலைவா் அருள்தாஸ், நகர தலைவா் பொன்பாண்டி, கம்யூனிஸ்ட் கட்சி கல்யாணி, மாயகிருஷ்ணன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

