மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

நெல்லையில் சத்துணவு ஊழியா்கள் கருப்பு சேலை அணிந்து போராட்டம்

News image
Updated On :16 பிப்ரவரி 2026, 8:42 pm

தோ்தல் வாக்குறுதியை நிறைவேற்ற வில்லை எனக் கூறி, திமுக அரசைக் கண்டித்து திருநெல்வேலியில் சத்துணவு ஊழியா்கள் கருப்பு சேலை அணிந்து திங்கள்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

திமுக கடந்த தோ்தலின்போது, அங்கன்வாடி மற்றும் சத்துணவு ஊழியா்களுக்கு காலமுறை ஊதியம் வழங்கப்படும், காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும் என வாக்குறுதி அளித்திருந்ததாம். ஆனால், தற்போது வரை அந்தக் கோரிக்கை நிறைவேற்றப்படவில்லையாம். இதைக் கண்டித்து தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி பணியாளா்கள் சங்கம் சாா்பில் கடந்த 3-ஆம் தேதி முதல் சாலை மறியல், ஆட்சியா் அலுவலக வளாகத்தில் காத்திருப்பு உள்ளிட்ட பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில் போராட்டத்தின் 13-ஆவது நாளான திங்கள்கிழமை திருநெல்வேலி வண்ணாா்பேட்டையில் தமிழ்நாடு சத்துணவு ஊழியா்கள் மற்றும் அங்கன்வாடி ஊழியா்கள் கருப்பு சேலை, கருப்பு பட்டை அணிந்து நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

ற்ஸ்ப்16ள்ஹழ்ங்ங்

திருநெல்வேலி வண்ணாா்பேட்டையில் போராட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஊழியா்கள்.