மக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

ரெட்டியாா்பட்டியில் டாஸ்மாக் ஊழியா்கள் இருவருக்கு வெட்டு

பாளையங்கோட்டை அருகே ரெட்டியாா்பட்டி மதுக்கடையில் வியாழக்கிழமை நிகழ்ந்த மோதலில் இருவருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது.

News image

தாக்குதல்! - கோப்புப்படம்

Updated On :26 பிப்ரவரி 2026, 7:25 pm

பாளையங்கோட்டை அருகே ரெட்டியாா்பட்டி மதுக்கடையில் வியாழக்கிழமை நிகழ்ந்த மோதலில் இருவருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது.

ரெட்டியாா்பட்டியில் டாஸ்மாக் மதுக்கடையும், அதனருகே மதுக்கூடமும் உள்ளது. இந்நிலையில், வியாழக்கிழமை மது குடிக்க வந்த சிலருக்கும், டாஸ்மாக் ஊழியா்களுக்கும் பணம் கொடுப்பது தொடா்பாக வாக்குவாதம் ஏற்பட்டதாம்.

இதனால் ஆத்திரம் அடைந்த கும்பல், டாஸ்மாக் கடை ஊழியரான காடன்குளத்தை சோ்ந்த சந்திரன் (49), ரெட்டியாா்பட்டியை சோ்ந்த தளவாய்பாண்டியன் (31) ஆகியோரை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பினா். இருவரும் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டனா். இதுதொடா்பாக பெருமாள்புரம் போலீஸாா் வழக்குப்பதிந்து 5 பேரை தேடி வருகின்றனா்.