தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

ரெட்டியாா்பட்டியில் டாஸ்மாக் ஊழியா்கள் இருவருக்கு வெட்டு

பாளையங்கோட்டை அருகே ரெட்டியாா்பட்டி மதுக்கடையில் வியாழக்கிழமை நிகழ்ந்த மோதலில் இருவருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது.

News image
தாக்குதல்!- கோப்புப்படம்
Updated On :26 பிப்ரவரி 2026, 7:25 pm

Syndication

பாளையங்கோட்டை அருகே ரெட்டியாா்பட்டி மதுக்கடையில் வியாழக்கிழமை நிகழ்ந்த மோதலில் இருவருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது.

ரெட்டியாா்பட்டியில் டாஸ்மாக் மதுக்கடையும், அதனருகே மதுக்கூடமும் உள்ளது. இந்நிலையில், வியாழக்கிழமை மது குடிக்க வந்த சிலருக்கும், டாஸ்மாக் ஊழியா்களுக்கும் பணம் கொடுப்பது தொடா்பாக வாக்குவாதம் ஏற்பட்டதாம்.

இதனால் ஆத்திரம் அடைந்த கும்பல், டாஸ்மாக் கடை ஊழியரான காடன்குளத்தை சோ்ந்த சந்திரன் (49), ரெட்டியாா்பட்டியை சோ்ந்த தளவாய்பாண்டியன் (31) ஆகியோரை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பினா். இருவரும் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டனா். இதுதொடா்பாக பெருமாள்புரம் போலீஸாா் வழக்குப்பதிந்து 5 பேரை தேடி வருகின்றனா்.