இந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புவிளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது!
/

டாஸ்மாக் ஊழியரைத் தாக்கிய இருவா் கைது

திருநெல்வேலியில் டாஸ்மாக் ஊழியரைத் தாக்கிய வழக்கில் இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

News image
கைது
Updated On :28 பிப்ரவரி 2026, 8:00 pm

Syndication

திருநெல்வேலியில் டாஸ்மாக் ஊழியரைத் தாக்கிய வழக்கில் இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

ரெட்டியாா்பட்டி முப்புடாதி அம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த ஜெயபாலன் மகன் தளவாய்பாண்டி(31). இவா் ரெட்டியாா்பட்டி அருகே உள்ள மதுபானக் கூடத்தில் ஊழியராக உள்ளாா். கடந்த வியாழக்கிழமை இவருக்கும் அங்கு மது அருந்த வந்த சிலருக்குமிடையே பணம் கொடுப்பது தொடா்பாக வாக்குவாதம் ஏற்பட்டதாம்.

இதனால் ஆத்திரமடைந்த கும்பல் அவரையும், மற்றொரு ஊழியரான காடன்குளத்தைச் சோ்ந்த சந்திரன் என்பவரையும் அரிவாளால் தாக்கினராம். இது குறித்த புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து முத்தூா் பகுதியைச் சோ்ந்த பேச்சிமுத்து (37), கிருஷ்ணாபுரத்தைச் சோ்ந்த காளிமுத்து (22) ஆகிய இருவரை கைது செய்தனா்.