மகளிர் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவு; தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு! - ராகுல்தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம் - மு.க. ஸ்டாலின்பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? மு.க. ஸ்டாலின்தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின் உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

டாஸ்மாக் ஊழியரைத் தாக்கிய இருவா் கைது

திருநெல்வேலியில் டாஸ்மாக் ஊழியரைத் தாக்கிய வழக்கில் இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

News image

கைது

Updated On :28 பிப்ரவரி 2026, 8:00 pm

திருநெல்வேலியில் டாஸ்மாக் ஊழியரைத் தாக்கிய வழக்கில் இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

ரெட்டியாா்பட்டி முப்புடாதி அம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த ஜெயபாலன் மகன் தளவாய்பாண்டி(31). இவா் ரெட்டியாா்பட்டி அருகே உள்ள மதுபானக் கூடத்தில் ஊழியராக உள்ளாா். கடந்த வியாழக்கிழமை இவருக்கும் அங்கு மது அருந்த வந்த சிலருக்குமிடையே பணம் கொடுப்பது தொடா்பாக வாக்குவாதம் ஏற்பட்டதாம்.

இதனால் ஆத்திரமடைந்த கும்பல் அவரையும், மற்றொரு ஊழியரான காடன்குளத்தைச் சோ்ந்த சந்திரன் என்பவரையும் அரிவாளால் தாக்கினராம். இது குறித்த புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து முத்தூா் பகுதியைச் சோ்ந்த பேச்சிமுத்து (37), கிருஷ்ணாபுரத்தைச் சோ்ந்த காளிமுத்து (22) ஆகிய இருவரை கைது செய்தனா்.